செவ்வாய், 10 அக்டோபர், 2017

நான் முதலில் உன்னை காணும் போது
வெறும் செடியாக  தான் தெரிந்தாய்
உன்னிடம் தினமும் பேச
நமக்குள் ஒரு உறவு,
நீயும் செழித்து பூக்களாய் மலர்ந்தாய்
நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன்
சில காலம் ஆனது
பூக்கள் வேறு இடம் செல்லும்
நாளும் வந்தது
நீ என்னைவிட்டு
பிரிய போகிறாய் என்று
தெரிந்தும்
அதை ஏற்காமல்
என் மனம் தவிக்கிறது.....

# அழகான பூக்கள் #

---மு. நித்யா

திங்கள், 9 அக்டோபர், 2017




மங்கல ஆரத்தி ......

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
படம்

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.


அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
               
                                                                 பொறுமையின் ஆதாயம்...


edison க்கான பட முடிவு 


          தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்‌டர்ன் யூனியன் கம்பனி ,வணிகம் சம்பந்தமாகப் பேச அழைத்திருந்தது . அவர் கண்டுபிடித்திருந்த தந்திப்பதிவு நாடா உரிமையை அவர்கள் கேட்டிருந்தார்கள். தன் கண்டுபிடிப்புக்கு என்ன விலை கோருவதென்று எடிசன் தீர்மானித்திருக்க வில்லை அந்த நிறுவனத்தாரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.
தன் மனைவி உடன் ஆலோசித்து 20,000டாலர் விலையாக கோரலாம் என்று முடிவு செய்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தின் சார்பாய் அவரை வரவேற்ற அதிகாரி கேட்டார் 'நல்லது மிஸ்‌டர் .எடிசன்,நீங்கள் என்ன விலை எதிர் பார்க்கிறீர்கள் ?என்று .
20000டாலர் அதிகமோ என அமைதியாக அமர்ந்திருந்தார்எடிசன். எடிசனின் பதிழுக்காக அதிகாரி காத்திருந்தார் ....
ஆயினும் எடிசன் வாய் திறந்து பேசவில்லை ....
அதிகாரி அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் பேச முனைந்தார் .'எடிசன்! ஒரு லட்சம் டாலர்கள் ,சரியா?என்று விலை வைத்தார்.....
    பொறுமையோடிருந்த எடிசனுக்கு ஆதாயம் .பொறுமை இழந்த அதிகாரியால் நிறுவனத்திற்கு இழப்பு.....

எந்த செயலையும் பொறுமையோடு செய்தால் வெற்றி நிச்சயம்...மாறாக அவசர அவசர மாக செய்தால் தோல்வி தான் மிஞ்சும்...

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தாயின் அருமை

                                            தாயின் அருமை           
                                           

    "அம்மா!...வலித் தாங்க முடியலயே ..அம்மா!...."
"கொஞ்சம் பொறுத்துக்கோ மாலதி ஒண்ணும் ஆகாது நான் இருக்கேன் "
"முடியலங்க ரொம்ப வலிக்குது" ... என்று பிரசவ வலியில் துடிதுடித்து போனாள் மாலதி .
திவாகருக்கு இப்படியெல்லாம் துன்ப பாடுவாள் என நினைத்திருந்தால்  உள்ளே வந்திருக்க மாட்டான்
திடீரென அம்மாவின் நியாபகம் ,...அவனையும் சேர்த்து ஆறு பேர் ,..நாலு ஆண் ரெண்டு பெண் ...எப்படித் துன்ப பட்டிருபாள் ......
    "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது "என கூறி சென்றாள் மருத்துவர் .
மாலதி மயங்கி கிடந்தாள் ...
ஆனால் திவகருக்கு தன் தாயின் நினைவாகவே இருந்தது .
யாருக்கோ அவசரமாய் போன் பண்ணினான் .
"மேடம்! நான் திவாகர் பேசறேன்" .
"சொல்லுங்க திவாகர் நேத்தே எல்லா பில்லும் கட்டிடிங்களே!"
"இல்லை மேடம் நான் என் அம்மாவை கூட்டிச் செல்ல இருக்கிறேன் ...அதற்கு தேவையான ஏற்பாடுகளை செயுங்கள்" ...என்றான் திவாகர்.
  "சரி திவாகர் நான் ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் தங்களுக்கு தெரிவிக்கிறேன்"..என்று கூறி வைத்தார் அந்த முதி
யோர் இல்ல நிர்வாகி. mother image in tamil க்கான பட முடிவு


வயதான தாய் தந்தையிடம் நாலு வார்த்தை அன்பாக பேசினாலே போதும் அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க ...ஏன் என்றால் அவர்கள் தேவைகளை விட உணர்வுகளை அதிகம் நேசிப்பவர்கள் ....

வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்

உண்மையில் ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை, மூளையும் வித்தியாசப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.



ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் விவரித்து, கொஞ்சம் வளவளவென்று இழுத்து கூற முடிவதில்லை. ஒரு ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

அவளுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றி சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மண வாழ்க்கையிலும், காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.படம்


இலைச்சாற்றில் ஆரோக்கியம் :-

* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறுதொடர்புடைய படம் - கண் பார்வை அதிகரிக்கும்.