வியாழன், 2 மார்ச், 2017

பண பரிவர்த்தனைக்கு கட்டணம்..


4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் - தனியார் வங்கிகள்.

பிரமிடு பற்றிய அரிய தகவல்கள்....!! 


Image result for pramit

 கிசாவின் பெரிய பிரமிடு பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும்.

கிசாவின் பெரிய பிரமிடுவை, உலகின் மிகப் பெரிய ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் காத்துக்கொண்டு வருகின்றன.

முதல் அறியப்பட்ட பிரமிடு கட்டிட கலைஞர் இம்ஹொடெப், ஒரு பண்டைய எகிப்திய பல்துறை வல்லுநர், பொறியாளர் மற்றும் மருத்துவர்.

 பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை, ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

 பண்டைய எகிப்திய பிரமிடுகள் மிகவும் நன்கு அறியப்பட்ட பிரமிடு கட்டமைப்புகள் ஆகும்.

 130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

 3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

 அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது. 

 எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

 பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும், இந்த வழியில் கட்டப்பட்ட ஒன்று பிரமிடு மட்டுமே.

குன்னக்குடி வைத்யநாதன்



பிரபல வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள்.

ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, 'ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!" என்றார். அதையே சவாலாக எடுத்துக் கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.

 வயலின் கற்றுக்கொண்டு தனது 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976 முதல், வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.

1969-ல் 'வா ராஜா வா" என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 'வயலின் சக்கரவர்த்தி" என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

புதன், 1 மார்ச், 2017

தர்மம் என்றால் என்ன..??


                        
                        தர்மம் என்றால் என்ன ?
             





            தர்மத்தை நிலைநிறுத்த பல போர்கள் நடந்ததாக நம் இலக்கியங்கள் கூறுகின்றன. தர்மத்தை நிலை நிறுத்ததான் மஹாபாரத குருஷேத்திரப் போரும் நடந்தது. மஹாபாரதப் போரில், போர் முடிந்த பின் கிருஷ்ணன் அர்சுணனுக்கு செய்ததும் தர்ம உபதேசம் தான். கர்ணனைப் பொறுத்த வரை கொடை கொடுத்து தர்மம் செய்தார்.
             தர்மத்தை சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தலாம். அது எப்படி என்றால், நமக்கு மற்றொருவர் எந்த காரியங்களை செய்தால் நாம் மகிழ்வாக இருப்போமோ அதை நாம் பிறருக்கு செய்ய வேண்டும். அதைப் போல நமக்கு மற்றவர்கள் எந்த காரியங்களை செய்தால் நம் மனம் வருந்தும் என்று நினைக்கின்றோமோ, அக்காரியங்களை நாம் மற்றவருக்கு செய்யாமல் இருக்க வேண்டும். இதுவே, தர்மமாகும்.