வியாழன், 24 நவம்பர், 2016

தி கேஜ்ட் மங்கி

                                                                தி கேஜ்ட் மங்கி
     

ஒரு ஊரில் ஏழை மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது.அந்த குரங்கு நிறைய வித்தைகளை காட்டும். தினமும் அந்த குரங்கினை தூக்கி அலைந்து வித்தை காட்டி கடுமையாக உழைத்தான்.மக்களும் அந்த வித்தைகளை பார்த்து சில சில்லறைகளைக் கொடுப்பர்.அந்த சில்லறைகளை எடுத்து தன் உரிமையாளரிடம் கொடுக்கும் அந்த குரங்கு.ஒரு நாள் அந்த குரங்கை உரிமையாளர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
           

அங்கு கூண்டிற்குள் இருந்த குரங்குகளுக்கு மக்கள் பழங்கள் ரொட்டித்துண்டுகள் கொடுத்ததைக் கண்டது.அதைக் கண்டபின் இந்த குரங்கு மிகவும் அதிர்ஷசாலி, என்னைப்போல,உணவிற்கு கடினமாக உழைக்கத்தேவையில்லை.இலவசமாக உணவு அதனைத்தேடி வருகிறது என்று எண்ணியது.
            அன்றிரவு அந்த பூங்காவிற்கு சென்று தங்கி உணவுகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்தது.சில காலம் கழித்து அந்த குரங்கு சலுப்பாக உணர்ந்தது.உணவு உண்ண பார்வையாளர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்.பின்பு,தன் உரிமையாளரிடமே ஓடி வந்து உழைத்து பிழைத்தது.      
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


தி கிலவர் மௌஸ்

                                                            தி கிலவர் மௌஸ்


சிறிய எலி ஒன்று எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும்.அது அன்று நல்ல மனநிலையில் சுற்றித்திறிந்தது.எல்லா இடங்களிலும் தாவி,ஓடியது.பின்பு, ஒரு பெரிய மாடு மரத்தடியில் உறங்கியதைக் கண்டது.அந்த மாட்டிற்கு கூர்மையான நீலமான கொம்புகள் இருந்தது.அதன் மூக்கிலிருந்து காற்று அதிவேகமாக ளியேவும் உள்ளேவுமாக சென்றது.
            அந்த எலி மாட்டின் மூச்சை உற்று கவனித்தது.பின்பு,அது மூச்சை வேகமாக இழுக்கும்போது காற்றின்வழி இந்த எலி மூக்கை அடைத்தது.மூச்சு விடத் தினறி விளித்து பார்க்கையில் எலி ஓடியது. கடுமையாக கோபம் அடைந்த அந்த மாடு,எலிக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்தது.உடனே அந்த எலியை விரட்டி ஓடியது.இந்த எலியும் விடாமல் ஓடி ஒரு சிறு ஓட்டைக்குள் சென்றது.எலியை விரட்டி வந்த அந்த மாடு ஓட்டை இருந்த மரத்தில் மோதி இரத்தம் வழிய நின்றது. இதன்மூலம், எதனையும் சிறியதாக எண்ணக்கூடாது என்று கற்றுக்கொண்டது அந்த மாடு.                                                
                                                (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


புதன், 23 நவம்பர், 2016

இதயத்தை பாதுகாக்க 10 கட்டளைகள்,,,




நம்முடைய வாழ்வு சிறக்க நம் இதயத்தை காக்க நாம் கடைபிடிக்க 10 கட்டளைகள் உள்ளன அவை..

• 0 தொலைக்காட்சியின் முன் அமர்வது

• 1 மணிநேரம் உடற்பயிற்சி

• 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது

• 3 கப் சூடான கிரீன் டீ அருந்துவது

• 4 முறை நம் வேலைகளின் நடுநடுவே சிறிதளவு மூளைக்கும், இதயத்திற்கும் ஓய்வு தருவது

• 5 முறை சிறிய சிறிய அளவில் உணவு உண்பது

• 6 மணிக்கு காலையில் எழுவது

• 7 நிமிடங்களாவது வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பது

• 8 மணிநேரம் தூக்கம்

• 9 மணிக்கு வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்வது

• 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது

- இந்த 10 கட்டளைகளையும் கடைபிடித்தால் இருதய நோய் வராது.

இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். அவை ...

1. SALT(உப்பு)
2. SUGAR (இனிப்பு)
3. SMOKE(புகைப்பிடித்தல்)
4. SPIRIT(மதுபானம்)
5. STRESS(மனஅழுத்தம்)
6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)

இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S" அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும். உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.

மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம். முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது. நாமும் நம் இதயத்தை காப்போம்.

எனக்கு இந்த தகவலை வழங்கிய நண்பருக்கு நன்றி..!!

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையத்தில் இ-புத்தகமாக மாற்றி பதிவிறக்கலாம்...!!



அருங்காட்சியகங்கள்  துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் |   தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும்   புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக படிப்பதற்கு வசதியாக அவை   இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்

செவ்வாய், 22 நவம்பர், 2016

தி மேர்ச்சன்ட்ஸ் விட்னஸ்

                                                        

ஒரு நாள் வணிக வியாபாரி ஒருவர் கிரமாம் ஒன்றிர்க்கு வியாபாரத்திற்காக வந்தார்.வழியில் வந்த விவசாயி ஒருவரை நிறுத்தி விடுதி எங்கே இந்த ஊரில் இருக்கிறது என்று விசாரித்தார்.அந்த விவசாயியும் விடுதிக்கு வழி காட்டினார்.தனது குதிரையை ஒரு வலிமையான  தூனில் கட்டி உறங்கச் சென்றார்.

           

காலையில் எழுந்து அந்த தூனிடம் சென்று பார்த்தார்.ஆனால், அந்த விடுதியின் உரிமையாளர்,``எனது தூன் ஒரு குதிரைக்கு பிறப்பு கொடுத்திருக்கிறது,இது என்னுடையது’’ என்று கூறினார்.அப்படி ஒரு பொய்யைக் கேட்டது அந்த வணிகர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.இருவரும் விவாதிக்க ஆரம்பித்தனர்.இருவரும்,நீதிமன்றத்திற்கு நீதியைநாடி சென்றனர்.அந்த வணிகரின் சாட்சியாளராக அந்த வழி கேட்ட விவசாயியை அழைத்தார் ஆனால்,அவர் வர மறுத்துவிட்டார்.எனினும்,சில காலங்கலுக்கு பிறகு விவசாயி அங்கு வந்து,``ஐயா, தாமதத்திற்கு என்னை மன்னித்துவிடுங்கள், நான் வேகவைத்த கோதுமையை என் நிலத்தில் பயிராகத் தூவிக்கொண்டிருந்தேன்என்றார்.அதற்கு நீதிபதி சிரித்துக்கொண்டே ``எப்படி வேகவைத்த கோதுமையை கொண்டு நீ பயிர் விழைவிக்க இயலும்?’’ என்றார்.அதற்கு ``ஏன் முடியாது ஒரு தூன் குதிரையை கொடுக்கும்போது வேகவைத்த கோதுமை ஏன் பயிரை விலைவிக்காது?’’ என்று கேட்ட போது நீதிபதி உண்மையை உணர்ந்து விடுதி உரிமையாளரை தண்டித்தார்.
                                             (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி