வெள்ளி, 18 நவம்பர், 2016

தி கிலவர் மேர்சன்ட்

  தி  கிலவர் மேர்சன்ட்
n  டைனி டாட் ஸ்டோரீஸ்..

       

ஒரு மழைக்கால இரவில்,இரு ஆண்கள் அந்த இரவை களிக்க வேண்டும் என்பதற்காக வாடகை அறையெடுத்து தங்கினர்.அங்கு ஒரு அறைதான் இருந்த காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை என்றாலும் ஓறறையில் தங்கினர்.உண்மையில்,அதில் ஒருவன் திருடன்,ஒருவன் மிகப்பெரிய வைர வியாபாரி.சில காலம் அவரை அவன் பின்தொடர்ந்து வந்தான், அந்த வியாபாரி நிறைய தொகையையும் விலைமதிபற்ற வைரங்களையும் தன்னுடன் கொண்டு வந்தார்.

அந்த இடத்து உரிமையாளர் எப்பொழுது இருவருக்கும் தங்க ஒரே இடத்தை கொடுத்தாரோ, அப்போது, அந்த ஒரே அறையில் தங்கள் உடமைகளை வைத்துக் கொண்டனர்.சில நிமிடங்களுக்கு பிறகு உணவு இடைவேளைக்காக வியாபாரி வெளியே சென்றார்.அந்த திருடன் வியாபாரியின் உடமைகளை சோதனை புரிந்தான்,ஆனால்,அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.விரைவில் அவர் திரும்பி வந்தார்.இருவரும் உரங்கச் சென்றனர்.அடுத்த நாள் காலையில் திருடன்,``ஐயா! நான் ஒரு திருடன் உங்கள் உடமைகளை திருடிச் செல்ல முயற்சி செய்தேன்.ஆனால்,எனக்கு எதுவும் கிடைக்கவில்லை’’ என்று கூறினான்.அதற்கு அந்த வியாபாரி``எனக்கு தெரியும் அதனால் தான் என்னுடைய உடமைகளை உன் பையில் வைத்திருந்தேன் என்று கூறினார்.

ஸ்வீட் ட்ரூத்

                                                                      ஸ்வீட் ட்ரூத்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்

       அன்று சிங்கத்தின் பிறந்த நாள்.காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் பறவைகளும் தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு பரிசுகளுடன் வந்தன.


விழா நடக்கும் இடத்தை அனைவரும் அலங்கரித்துக் கொண்டிருந்தன.சிங்கம் தனது பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருத்தது. தக்க நேரத்தில் இனிப்பன் வெட்டி பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது.பின்பு கழுதையின் வருகையின்மையை கண்டரிந்தது சிங்கம் அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் அதனால் கழுதையால் வர இயலவில்லை என்று எண்ணியது.

            அடுத்த நாள் சிங்கம் தான் நடந்து வந்த வழியில் கழுதையை சந்தித்தது.அங்கு அதன் வருகையின்மையை பற்றி விசாரித்தது.கழுதை அதற்கு, எனக்கு என் வீட்டிலேயே நான் இயல்பாக உணர்கிறேன் அங்கு வருவதற்கு எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அவமதிக்கும் வகையில் கூறியது.


அந்த கழுதை கூறியது உண்மையாக இருந்தாலும்,உண்மையை அழகுற கூறவில்லை.அதனால் ஆத்திரமடைந்த சிங்கம் கழுதையை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது. அதனால்தான், இங்கு மனிதர்களுடன் பொதி சுமக்கிறது.ஏனெனில், மனிதர்களுடன் உண்மையை அழகுற கூற தெரியாதவன்.

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!!


Image result for கணினி தேர்வு


தமிழக அரசு பணியில் தட்டச்சர்,சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7,8-ம்  தேதிகளில் நடத்தப்படுகிறது.இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ; (www.tndote.org)

மேலும் தகவலுக்கு ;   http://alleducationnewsonline.blogspot.in/