புதன், 24 ஜனவரி, 2018

பூமித்தாய்


பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை 
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..  

                                          வர்சிதா 
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

அன்பு



நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. ,  பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம் 
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம்  காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன. 
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது 
அம்மா என்ற வார்த்தை மட்டுமே 
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.

வ..ரூபிகா              
                         முதலாம் ஆண்டு கணிதம் இ

உறவுகள்


உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
  நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
  சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
  நீ விலகி விலகிப் போனாலும்
  உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
  கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி 
  உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு 
  பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?       
                                
தாமரைச்செல்வி                  
            முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

காலங்கள் கடந்த நட்பு




கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல!
கண் இமை மூடும் வரை
சேர்ந்து இருப்பது தான் நட்பு!
எங்கேயோ பிறந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனோம்
காலங்கள் கடந்துப் போனாலும்
                                  கடைசி வரைத் தொடர வேண்டும் நம் நட்பு.                                          

    நந்தினி                       
    முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

கேள்வியோடு பெண்...



விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.

ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை

சனி, 20 ஜனவரி, 2018

சட்டமன்றம்

சாமானிய
மக்களால்
என்றுமே
விலைக்கு
வாங்க
முடியாத
ஒரே
இடம்

# சட்டமன்றம் #

---மு. நித்யா