வியாழன், 26 மே, 2016

மே டின் ஜப்பான்…!!!


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் அணுக்குண்டு வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் தான் ஜப்பான்.பொருளாதாரத்தில் மிகவும் அடிப்பட்டு பின் தங்கிய நிலையும் ஏற்பட்டு இருந்தது.போர்முனையில் தோற்றாலும்,பொருளாதாரத்தில் தோற்க விரும்பாமல் தன்னம்பிக்கையும் உழைப்பையும் உரமாக்கி மண்ணில் விதைத்தனர் ஜப்பானியர்கள். பல தலைவர்களால் ஜப்பான் பொருளாதாரம் விரிவடையக் காரணமாக இருந்தாலும் 30 ஆண்டுகளில் ஜப்பான் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிகராக மாற்றியவர், மே டின் ஜப்பான்(made in japan) என்ற வாசகத்திற்கும்,தரக்கட்டுபாட்டிற்கும் ஒரு பிரம்மாவாக திகழ்ந்தவர் தான் அகியோ மொரிட்டோ( Akio Morito ) இவரைப் பற்றி தான் இப்பதிவு அமைய உள்ளது.

1921 ஆண்டு ஜனவரி 26 அன்று ஜப்பானில் உள்ள டோக்கியோ என்ற நகரில் பிறந்தவர் தான் மொரிட்டோ.400 வருடங்களாக தனது குடும்பம் செய்து வந்த மதுபானம் தயாரிக்கும் தொழிலை ஜப்பானியர்களுக்கு கற்று தருவதால் எந்தவித பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாது என்று நினைத்தார்.அவருக்கு சிறுவயதில் இருந்தே கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் ஆர்வம் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம் என்று நினைத்தார்.1946 ஆண்டு மே 7 அன்று தனது கடற்படை நண்பரோடு 375 டாலர் மதிப்பில் அதாவது 190 ஆயிரம் யெண் முதலீட்டில் டோக்கியோ டெலி கமுனிகேசன் என்ஜினியரிங் கார்பரேசன் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னியல் பொருள் தான் டேப் ரெக்காடர் என்ற ஒலிப்பதிவு கருவி ஆகும்.போருக்கு பிந்திய காலம் என்பதால் அவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க இயலாது என்பதால் அமெரிக்காவின் வெல் லேப்ஸ்  நிறுவனத்திலிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டை பையில் வைக்கக்கூடிய அளவில் ஒரு வானொலியை உருவாக்கினார்.அமெரிக்காவில் இருந்து வாங்கி உற்பத்தி செய்து அதனை அவர்களிடமே விற்பனை செய்தார்.எனவே உலகம் முழுவதும் இவர்களின் பொருள்கள் வலம் வர வேண்டும் என்று பல அகராதிகளில் தேடிய போது தான், சோனஸ் என்ற சொல் அதாவது அதற்கு ஒலி என்று பொருள்.பிறகு சோனிபாய்ஸ் என்ற இசைக்குழுவின் பெயரை இணைத்து தான் சோனி கார்பரேசன் என்ற பெயரை உருவாக்கினார்.

தனது குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது தனது பிள்ளைகள் பெரிய வானொலிகளை எடுத்துச் செல்வதை கவனிந்த மொரிட்டோ,உடனே யோசித்து உருவாக்கிய பொருள் தான் வாக்மேன்.இதனை உருவாக்கிய போது அருகில் இருந்தவர்கள் காதில் வாக்மேனை மாட்டிக் கொண்டு போனால் பைத்தியம் என்று நினைப்பர் எனக்கூறினார்கள்.அதனை முறியடித்தது வாக்மேன்.இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.பிறகு தொலைகாட்சி,வானொலி போன்ற பல்வேறு பொருள்கள் தரக்கட்டுபாடு கொண்டு உற்பத்தி செய்து விநியோகம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில்முனைவோரில் அமெரிக்கா இல்லாத ஒரு ஜப்பானிய நபர் தான் மொரிட்டோ.


தனக்கு 72-வயது நடைபெற்ற போது வாதத்தால் பாதிக்கப்பட்டார்.பிறகு அனைத்து பொறுப்புகளையும் தனது பொருளை குறைக்கூறி கடிதம் எழுதிய நொரியோ ஒகா என்பவரின் குறையில் நிறைக் கண்டு அவரிடம் ஒப்படைத்தார்.1966 ஆண்டு அவர் எழுதிய Never Mind School’s Records என்ற நூலில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப் பெற பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் முக்கியமல்ல என்று மொரிட்டோ வாதாடினார்.ஆர்வம் தான் படைப்பாற்றலின் திறவுகோல் என்பவது மொரிட்டோ நமக்கு விட்டுச் சென்ற பொன்மொழி.நாம் அனைவரும் ஆர்வம்,தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

காபி மற்றும் தேநீர்


                          காபி மற்றும் தேநீர்

முன்னுரை


     காலை எழுந்ததும் மற்றும் மாலை நேரத்திலும் நம்மில் பலருக்கு காபி அல்லது டீ குடித்தால் தான்  அடுத்த வேலையை செய்ய முடியும்.  அதை குடிக்க சற்று தாமதம் ஆனாலும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.

காரணம்


    காபி அல்லது டீ மனிதனின் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்தால்  நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபி நம் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. அதனால் நாம் சோர்வாக உணரும் போது காபி அல்லது டீயை குடிக்கிறோம். காபியில் காபிஃன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்  தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

காபி அல்லது டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

     
   தினமும் இரண்டு கப் காபி குடித்தால் 14% பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
   
       பார்கின்சன் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய் வராமல் தடுக்கிறது.
     
   காபியில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் பாதிப்படைந்த செல்களை புதிப்பித்து கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

   மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காபிஃன் குறைப்பதால் மன அழுத்தம் குறையும். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு டீ குடிப்பதிலும் இருக்கிறது.

   தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால் அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளையும் குறைக்குமாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

   
    காபி அல்லது டீயை அளவாக குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ குடித்தாலோ அல்லது காபி குடித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் அமிர்தமே நஞ்சாவது போல் இதனாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.

  காபி அதிகமாக குடித்தால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து இரத்தசோகை ஏற்படலாம்.

  காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதய வால்வுகளை விறைப்படையச் செய்து பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.

  சிலர் தலைவலியாக இருந்தால் காபி அல்லது டீயை குடிப்பர். தலைவலிக்கு அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
  
  சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். குறித்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கத் தவறினால் பதற்றம் உண்டாகும். மேலும் எலும்பின் உறுதியை பாதிக்கும். பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் காபி அல்லது டீயை அதிக சூடாக குடிப்பதால் பற்கள் பலம் இழக்கிறது.

   காபி அல்லது டீயுடன் நாம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவிலேயே நமக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைத்து விடும். நாம் காபியில் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.

  காபி அல்லது டீயை அதிகமாக குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதை குடிக்கத் தவறினால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடுவது போல் இருக்கும்.

முடிவுரை

எதையும் அளவாக சாப்பிட்டால் நமக்கு நன்மை தரும். நன்மைதானே என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு விசமாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன், 25 மே, 2016

உலகின் தலைசிறந்த 100 பேரின் வாழ்க்கை வரலாறு



வானம் வசப்படுமே என்ற இந்த ஒலிக்கோப்பை நான் முன்பே கேட்டிருக்கிறேன். எனது மாணவர்களுக்கும் வகுப்பில் கேட்கச் செய்திருக்கிறேன். தற்போது அந்த ஒலிக்கோப்புகளுக்குத் தேவையான நிழற்படங்களையும் சேர்த்துக் காணும்போது இன்னும் பயனுடையதாக மனதில் பதிவதாக இச்செய்திகள் இடம்பெறுகின்றன.