திங்கள், 11 ஏப்ரல், 2016

இனியவை நாற்பது

              

  1. Image result for இனியவை நாற்பது
முன்னுரை:
 பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களை கொண்டது. ஒவ்வொரு வெண்பாவிலும் 3 முதல் 4 கருத்துகள் இடம் பெறுகின்றன. மக்கள் தங்கள் வாழ்வில் பின் பற்ற வேண்டிய இனிய செயல்கள் இந்நூலில் திரட்டித் தரப்பட்டுள்ளன.மேலும் சங்க காலத்தில் நடைமுறையில் இல்லாத பழக்கங்கள் பற்றி இந்நூலில் கூறுகிறது.
நட்பு கொள்ளுதல்:
 குற்றங்களை செய்யாமல் தீய வழியை பின் பற்றாமல் நாடோறும் சென்று கற்றல் மிக இனியவை, பிறரிடம் கடன் வாங்காமல் தன் மாட்டை கொண்டு உழுவுதல் மிக இனியவை. அது போல் ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது அவரது குணத்தையும் பழக்கங்களையும் நன்கு அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும்.
தரும செயல்கள்:
நம்மால் முடிந்தவரை தரும செயல்களை செய்தல் மிக இனியவை, நன்னெறிப்பட்டார் சொல்லும் பயனுடைய சொல்லைக் கேட்டு அதன் வழி பின்பற்றுதல் இனியவை.
மாட்சிமையுடைவரின் செல்வம்:
குழந்தைகள் மிக ஆரோக்கியத்துடன் எந்த நோய் நொடியும் இல்லாமல்  வாழ்வது இனியவை. சபையில் அஞ்சாதவனாய் சபைகேற்ற கருத்துகளை சொல்பவனின் கல்வி இனியவை. எந்த பொருளின் மீதும் மயக்கம் இல்லாதவராய் உள்ளத்தில் மாட்சிமை உடையவரை அடையும் செல்வம் நீங்காமல் இருப்பது இனியவை.
குற்றம் இல்லாமல் வாழ்தல்:
சமூகத்தில் தனது மானம் இழந்த பின் உயிர்வாழாமல் இருப்பது இனியவை. தான் பெரியன் என்று கூறிக்கொண்டு வாழாமல் பிறரிடத்தில் அடங்கி வாழ்வது இனியவை.அது போல் குற்றம் ஒன்றும் செய்யாமல் நல்ல வழியில் பொருள் ஈட்டியதும் பொருளுடைமையும் எல்லா மக்களுக்கும் இனியவை.
பிறக்கு கொடுத்தல் இனியவை:
நன்கு கற்றவர் முன் தன் கல்வியை சொல்லி பெருமையடைவது இனியவை. எள்ளவும் பிறரிடம் இரவாமல் தன்னிடம் இருப்பதை பிறக்கு கொடுத்து வாழ்வது இனியவை.
ஆராய்ந்து வாழ்தல்:
பிறர் பொருளை அபகரிக்காமல் தன் பொருளைக் கொண்டு வாழ்வது இனியவை. பாவங்களை செய்து சேர்க்காமல் அறம் செய்து வாழ்வது இனியவை. மறந்தும் கூட நல்ல குணங்கள் இல்லாதவரிடம் சேராமல் நல்ல வழியை ஆராய்ந்து அறிந்து வாழ்தல் இனியவை.
வேறுபடாமல் வாழ்தல்:
தனக்கு பொருள் வருகின்ற நெறியினை அறிந்து பிறக்கு கொடுத்தல் இனியவை. பெரிய பயனையுடைதாம் விரும்பியவற்றை ஆராய்ந்து செய்யாதவராய் தாயினும் தம்மியல்பின் வேறுபடாமல் வாழ்வது இனியவை.
பொருளை அபகரிக்காமல் வாழ்தல்:
ஒருவன் செய்த நன்றியின் பயனைக் கருதி வாழ்வது இனியவை, சபையில் ஒரு சார்பாக மாட்சிமையோடும் வாழ்தல் இனியவை. அறிவில்லாதவரிடம் இருக்கும் பொருளை அபகரிக்காமல் வாழ்வது மிகவும் இனியவை.
முடிவுரை:

அவ்வாறு கூறப்படும் கருத்துகளை, நல்ல செயல்களை பின் பற்றி வாழ வேண்டும் என்று பூதஞ் சேந்தனார் கூறுகிறார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பழங்களின் பெயர்

       
Image result for ஹிந்தி மற்றும் தமிழ்

ஹந்தி -ப்பல்                                தமிழ் - பழம்

1.ஆம்                                         மாம்பழம்
2.அங்கூர்                                      திராட்சை
3.கேலா                                       வாழைப்பழம்
4.அனார்                                       மாதுளம்பழம்

5.அம்ருத்                                      கொய்யாப்பழம்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை  ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி  காணலாம்.

புதன், 30 மார்ச், 2016

யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்..!!


Image result for blogger symbol of b

வலைப்பதிவர் நா.முத்து நிலவன் ஐயா,தனது வலைப்பக்கத்தில் தொடரும் தொடர் வலைப்பதிவர் என்று ஒரு பதிவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.

திங்கள், 28 மார்ச், 2016

இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

தமிழ்ச்சங்கங்கள்



                                             தமிழ்ச்சங்கங்கள்


முன்னுரை

மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர், பாண்டிய மன்னர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரையாசிரியர் நக்கீரர் ஆவார்.
தலைச்சங்கம்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இருந்தது.  சங்கம் நிறுவப்பட்ட இடம் கடல் கொண்ட மதுரை என்பர். அதில் தலைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் 549 பேர் என்பர். அவர்கள் உட்பட  4449 புலவர்கள் இதில் இருந்தனர்.
நூல்கள்
 அவர்களால் பாடப்பட்ட நூல்கள் ஏராளம். பரிபாடல், முதுநாரைய, முதுகுருகு, களரியாவிரை என பல நூல்கள் இச்சங்க காலத்தில் எழுதப்பட்டன. இதன் காலம் 4440 என்பர்.
இடைச்சங்கம்

 இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரமாகும். இடைச்சங்கத்தில்  உறுப்பினர்களாக இருந்தவர்கள் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கிரந்தை போன்றோர் என 59 ஆவர். இதன் காலம் 3700 என்பர்.
நூல்கள்
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல் போன்ற நூல்கள் அச்சங்கத்தில் எழுதப்பட்டன.
கடைச்சங்கம்
கடைச்சங்கம் இருந்த இடம் வட மதுரை. இதன் காலம் 9990 ஆகும். இதில் 49 பேர் உறுப்பினராக இருந்தனர். இதன் உறுப்பினர்களில் சிலர் சிறு மேதாவியர், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார், மகனார் நக்கீரனார் போன்றோர்.
நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் இச்சங்கத்தில் எழுதப்பட்ட நூல்களாகும்.




முடிவுரை
 மேற்கூறியவற்றை பார்க்கும் போது 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என்று அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன. அவையிரண்டும் இறையனார் களவியரலின் நக்கீரருரையைப் பின்பற்றுவன ஆகும்.