வணிகவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணிகவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஆகஸ்ட், 2018

பிறப்பின் வலி


நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு


கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA"
கருத்தரங்க நாள் - 05.01.2018


கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017

தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




திங்கள், 27 நவம்பர், 2017

சாணக்கியா 2017





அன்புடையீர் வணக்கம்,

இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017 அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு,
ஆர்.வாசுகி - 8807473229
(வணிகவியல் துறைத்தலைவர்)



வியாழன், 6 ஏப்ரல், 2017

எந்த வயதில் எவ்வளவு சேமிப்பு..




ஒரு தனிநபரின் நிதியில் அடிப்படை விதியாக சொல்லப்படுவது, இளம் வயதிலேயே சேமிக்கத் துவங்குங்கள் என்பது தான். கூட்டு வட்டியின் பலனை ஒருவர் முழுமையாக பெற வேண்டும் என்பதே, இதற்கான காரணம்.

ஒருவர் தனக்கு தானே ஊதியம் அளித்துக் கொள்ளும் முறையே சேமிப்பு ஆகும். நாம், நமக்காக சம்பாதிக்கும் போது, அதில் முதல் செலவானது தனக்காக செய்வதே சரியாக இருக்கும். எனவே தான், ஊதியத்தில் ஒரு பகுதியை, முதலில் சேமிப்பாக, உங்களுக்காக எடுத்து வையுங்கள் என்கின்றனர்.

சேமிப்பின் பயன் சேமிப்பதன் அடுத்த கட்டம், அதை கொண்டு என்ன செய்கிறோம் என்பது. சேமிப்பதற்கு இரண்டு முக்கிய நோக்கம் இருக்கிறது.

சேமிக்கப்படும் தொகையில், ஓய்வூதிய நிதி மற்றும் அவசர கால நிதிக்கான தொகை கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஓய்வூதிய நிதி, பணி வாழ்க்கைக்கு பின் கைகொடுப்பது. அவசர கால நிதி, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க உதவும்.

ஒருவரின் வாழ்வியல் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்றாலும், பொதுவாக எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு வரையறை இருக்கவே செய்கிறது. வயதிற்கேற்ப இந்த தொகை அமையும். இதை எளிதாக ஒரு பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

20 வயது துவங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு தனிநபர் தன்னுடைய சம்பளத்தில் சேமிக்க வேண்டிய பட்டியலை காண்போம்.

ஒவ்வொரு பருவத்திலும் சேமிக்க வேண்டிய தொகை :

ஓய்வு கால நிதிக்கான தொகை

20கள் மொத்த வருமானத்தில் 10 சதவீதம்

30கள் மொத்த வருமானத்தில் 12.5 சதவீதம்

 40கள் மொத்த வருமானத்தில் 15 சதவீதம்

50கள் மொத்த வருமானத்தில் 20 சதவீதம்

 60கள் இப்படி சேமித்து வந்திருந்தால் இந்த வயதிற்கு பின், சுதந்திரமாக அதன் பலனை அனுபவிக்கலாம்.

அவசரகால நிதிக்கான தொகை :

20கள் குறைந்தது 3 மாத அடிப்படை செலவுக்கான தொகை

 30கள் 3 முதல் 6 மாத கால செலவுக்கான தொகை

40கள் 6 முதல் 12 மாத கால செலவுக்கான தொகை

 50கள் 12 முதல் 24 மாத கால செலவுக்கான தொகை

 60கள் 3 முதல் 5 ஆண்டு கால செலவுக்கான தொகை










வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திறமைக்கான வரவேற்பு அழைப்பிதழ்..!!


கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 24.02.2017 அன்று வணிகவியல் மற்றும் வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்த இருக்கும் சாணக்கியா என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.வணிகவியல் துறையைச் சார்ந்த இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியின் இறுதியில் பரிசுத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்படும்.

போட்டிகளுக்கான குறிப்பு; மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.தேநீர் வழங்கப்படும்.

முன்பதிவிற்கான கடைசி தேதி ; 21.02.2017


அனுமதி இலவசம்..   

                                         

புதன், 14 செப்டம்பர், 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..

திங்கள், 12 செப்டம்பர், 2016

சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை  ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி  காணலாம்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

வாங்க போலாம் பங்குச் சந்தைக்கு..!! (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தைக்கு தயார் ஆயிட்டிங்கனு நினைக்கிறேன் நட்புகளே.சரி கடந்த வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக பார்த்து வருகிறோம்.இந்த வாரம்  பங்குத் தரகர்களிடம் எவ்வகையான கணக்கை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Image result for பங்கு சந்தை


பங்குத் தரகர்கள்;

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ இயலாது.அதற்கென இருக்கும் பங்குச் சந்தையில் உரிமம் பெற்ற உறுப்பினர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் அவர்களே தரகர்கள்.இத்தகைய தரகர்களிடம் இருவகையான கணக்குகளை உருவாக்க வேண்டும் அவை,

1.டீ-மேட் கணக்கு(demat account)
2.வியாபார கணக்கு(trading account)

டீ-மேட் கணக்கு என்றால் என்ன..?? 

                    வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும். 


வியாபார கணக்கு  என்றால் என்ன? 

                            Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் வியாபாரம்  செய்வதும் எளிதாக இருக்கும். ஆனாலும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

அடுத்த வாரம் இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.நன்றி.