புத்தி அகம் இருப்பதாலே புத்தகம் எனப்படுகிறது. புத்தக வாசிப்பு மொழி எல்லைகளைக் கடந்தது.
புத்தக வாசிப்பு நம் அறியாமையை அறிந்துகொள்ள உதவுகிறது.
புத்தகம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கூறிய 50 பொன்மொழிகளின் தொகுப்பாக இக்காணொலி அமைகிறது.
முனைவா். இரா.குணசீலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவா். இரா.குணசீலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 14 ஜூலை, 2021
செவ்வாய், 29 ஜூன், 2021
திங்கள், 21 ஜூன், 2021
தமிழில் புரட்டும் மின்னூல் - PDF to Digital Flipping Book
தமிழில் பிடிஎப் வடிவத்தில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வசதியுள்ள மின்னூல்களைாக மாற்றும் நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது.
https://www.flipbookpdf.net/
https://pubhtml5.com/
இந்த இணையதளங்களில் பிடிஎப் வடிவில் உள்ள மின்னூல்களைப் புரட்டும் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.
வியாழன், 10 ஜூன், 2021
கூகுள் லென்ஸ் வழியாக படங்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்துகளாக்க
# Image to Tamil text
கூகுள் லென்ஸ் வழியாக படங்கள், கையெழுத்துகளை எளிமையாக ஒருங்குறி வடிவ எழுத்துருக்களுக்கு மாற்ற முடியும்.அதனால் பழைய அச்சுவடிவில் உள்ள நூல்களை எளிதில் மின்னூலாக மாற்றமுடியும். கையெழுத்து வடிவில் உள்ள தமிழ் எழுத்துகளையும் ஒருங்குறி வடிவில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற முடியும். (Image to text for google lence) ,இந்த நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது.
புதன், 2 ஜூன், 2021
திங்கள், 31 மே, 2021
அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.
வெள்ளி, 5 ஜூன், 2020
ஆட்சென்ஸ் தகுதி பெற்ற பெண் எழுத்தாளர்களின் வலைப்பதிவு
டிசம்பர் 15, 2015 அன்று கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டது. கணித்தமிழ்ப் பேரவையின் நிதிநைல்கையுடன் கணினித் தமிழ்த் தட்டச்சு முதல் கணினித் தமிழ் நுட்பங்கள் வரை மாணவிகளுக்குப் பயிற்றுவித்தோம்.கணினித் தமிழ் நூலகம் ஒன்றை உருவாக்கினோம். அதன் ஒரு பயிற்சிக்களமாக இந்த வலைப்பதிவில் மாணவிகள் குழுவாகப் பதிவிடத் தொடங்கினர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஆர்வமான 50 மாணவிகள் தொடர்ந்து அவர்களது சிந்தனைகளைப் பதிவு செய்தனர். இன்றுவரை இந்த வலைப்பதிவு, 184539 மொத்த பார்வைகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த வலைப்பதிவில் மாணவிகளும் பெண் உதவிப் பேராசிரியர்களும் எழுதி வருகின்றனர். பெண்களின் சிந்தனைக் களமாக இந்த வலைப்பதிவு திகழ்கிறது.
இன்றைய பதிவு 1461 ஆக இடம்பெறுகிறது. கவிதை, கட்டுரை, பொது அறிவு, ஓவியம், வாழ்க்கை, பெண்ணியம், அனுபம், அறிவியல், கணிதம் எனப் பல துறைகள் சார்ந்த இம்மாணவிகளின் சிந்தனைகள் பெரிய பார்வையயும், பாராட்டையும் பெற்றதுடன் இவர்களுக்குள் இருந்த படைப்பாக்கத்திறனையும், நட்பு வட்டத்தையும் உருவாக்கியுள்ளது. யாவற்றுக்கும் மேலாக, டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களையும் கடந்து இதுபோன்ற வலைப்பதிவுகளில் எழுதுவதால் இணையப்பரப்பில் இவர்களது பெயரும் சிந்தனைகளும் நீங்கா இடம்பெற்றுள்ளன. வலைப்பதிவுகளுக்கு விளம்பரம் வெளியிட்டு பணம் வழங்கும் ஆட்சென்ஸ் விதிகளின் படி இந்த வலைப்பதிவு தகுதி பெற்றதால் இன்று விளம்பரம் வெளியிடுதற்கான அறிவிப்பு கிடைத்துள்ளது. அங்கீகாரம் வழங்கிய கூகுள் ஆட்சென்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களது சிந்தனைகளால் இந்த வலைப்பக்கத்தை நிறைத்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய தாளாளர், துணைத் தாளாளர், செயல் இயக்குநர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
மாணவிகளின் திறமைகளை இனம்கண்டு களம் அமைத்து தொடர்ந்து ஊக்குவித்து வரும் முதல்வர் முனைவா் மா. கார்த்திகேயன் அவர்களுக்கு எம் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
மாணவிகள் வெளியிடும் பதிவுகளை வாசித்து கருத்துரை நல்கி வழிகாட்டிவரும் ஆசிரியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்
ஞாயிறு, 30 டிசம்பர், 2018
சனி, 18 நவம்பர், 2017
செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்
கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்ற இணைய மாநாட்டில் வழங்கிய கட்டுரை......
மனிதர்களின்
அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி
என்ற பழமொழி கூட இக்கருத்தையே
எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு
எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல்
வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence)
என்று
அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக்
கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஏஐ
தொழில்நுட்பத்தின் தாக்கம்
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை
இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில்
சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும்
என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6
டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை
வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்,
கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற
நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால்
இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து
எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை
வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.
கணினிக்கு
தமிழ் கற்பித்தல்
இயங்குதளம் முதல் இணையம் வரை
வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக
இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி,
சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல்,
எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,
எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி
எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை
நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல் (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள்
கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும்
ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை
உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும்
வரவேண்டும்.
கணினி
வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்
குழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ்
தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி,
ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள்
போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில்
நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual
reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு,
சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள்
தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல்
கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தினால் உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த
தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.
தமிழ்
கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்
தமிழ் கற்றல்
என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற
நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள்
எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல்
என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம்
என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு,
நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை
அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.கியு + இ.கியு = ஏ.ஐ (IQ + EQ = AI)
Intelligence
quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல
Emotional
Intelligence என்ற சொல்
உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற
சொல்லை, செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம்.
இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.
மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு
வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின்
பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை
கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல்
பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
மனிதன்
- ஏ.ஐ நுட்பம்
கணினியும்,
இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு
வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட்
கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு
வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன்,
கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை ஆகியன
ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான
வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள்
நிறையவே உள்ளன.
நிறைவாக..
·
மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ
என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.
·
ஏஐ நுட்பத்தால் இன்றைய
சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும்
திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி
ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய
மாற்றம் ஏற்படவுள்ளது.
·
இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள்,
மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால்
கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய
இயலும்.
·
சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி,
இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு
நுட்பங்கள், எழுத்துக்களைப் பேச்சாகவும்,
பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural
Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural
networks) ஆழக் கற்றல் (Deep Learning)
என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
·
மேலும் கணினி
வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு,
இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன்
வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான
வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
·
கணினிக்குத்
தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு
மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.
·
ஒருகாலத்தில்
அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று
மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன.
இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது.
ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற
அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.
வெள்ளி, 17 மார்ச், 2017
கணித்தமிழ் நூலகம் !
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவைக்கான ஆதார நிதியாக ரூ 25000 வழங்கப்பட்டது. கணித்தமிழ் வளர்ச்சியை மாணவிகளிடம் கொண்டுசெல்லும் முயற்சியாக ரூபாய் 8000 மதிப்புள்ள நூல்கள் வாங்கி கணித்தமிழ் நூலகத்தை எம் கல்லூரியில் உருவாக்கியுள்ளோம்.
ஆதார நிதி வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநருக்கும், மாநில கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி ஐயா அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
எம் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும்
எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் செயல் வீராங்கனைகளான மாணவிகளுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
கணித்தமிழ் நூலகத்துக்காக வாங்கிய நூல்களின் விவரம்..
தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி
செல்பேசி பழுது நீக்குதல்
கீ போர்டு சார்ட் கட் எம் எஸ். ஓ
கீ போர்டு சார்ட் கட் - சி ஜி டி
கணினியின் அடிப்படை
கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்
போட்டோ சாப், கோரல் டிரா செயல்முறைப் பயிற்சிகள்
கணினிப் பராமரிப்பு
இணையத்தை அறிவோம்
இது உங்களுக்கானதா பாரு்ஙகள்
கணினித் தமிழ் - இல.சுந்தரம்
தமிழ் விக்கிப்பீடியா
நெட்வொர்க் தொழிலநுட்பம்
லினக்சு
நீங்களும் உருவாக்கலாம் வலைப்பூ
கட்டற்ற மென்பொருள்
லினக்சு
சிஎஸ்எஸ்
எச்டி எம் எல்
மை எக்யூல்
ரூபி
மற்றும் தமிழ்க் கம்யூட்டர்,
கம்யூட்டர் உலகம் இதழ்களின் ஒரு ஆண்டு சந்தா.
கட்டற்ற மென்பொருள் குறுவட்டு 8
கணித்தமிழ் மென்பொருள்கள் குறுவட்டு 2
கணித்தமிழ் வளர்ப்போம்! காலத்தை வெல்வோம்!
ஞாயிறு, 5 மார்ச், 2017
500 வது பதிவு!
தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை
அறிவியல் கல்லூரியில், தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 15.12.2015 இனிதே தொடங்கப்பட்டது. தமிழ்இணையக் கல்விக்கழகத்திலிருந்து திரு.தமிழ்ப்பரிதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு
எம் கல்லூரி கணித்தமிழ்ப்பேரவைக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக, முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக, முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
மாணவிகளின்
ஒத்துழைப்புடன்,
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க
100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.
2. ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.
3. தமிழ்த்தட்டச்சு தெரியாதவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99
முறையை பயிற்றுவித்தல்.
4. தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.
5. தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த
அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்
6. தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை
உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்
7. தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.
8. இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்
9. இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்
10. இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி
அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல்
என்னும் நோக்கங்களுடன்
எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எமது பணியைப் பாராட்டி தமிழ்இணையக் கல்விகழகம் ஆதார நிதியாக ரூ 25000 வழங்கியுள்ளது.
இன்று எம் கல்லூரியில்
600 மாணவிகள் தமிழ் ஒருங்குறி வழியிலான
தமிழ்த்தட்டச்சுப் பயிற்சிபெற்றுள்ளனர்.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல்கல்லூரியின் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.
எம் கல்லூரி மாணவிகள் கல்வி, அறிவியல்,
வணிகம், ஆன்மீகம், உளவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பாக்கம் என எல்லாத்துறைகளிலும்
எழுதிவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களையும், மறுமொழிகளையும் பெற்றுள்ளனர்.
தமிழ்மணம் திரட்டியில தரவரிசையில் எம் கல்லூரி வலைப்பதிவு 122 வது இடத்தில்
உள்ளது.
இன்று 500 பதிவு
என்னும் இலக்கை அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த வலைப்பதிவில் எழுதிய
ஒவ்வொரு மாணவிகளையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக வணிகவியல் துறை மாணவிகள் செ.வைசாலி, மற்றும் அ.கோகிலா, மற்றும்
ஆங்கிலத்துறை மாணவி ஜெ.ஜனனி, மூன்றாமாண்டு
கணிதவியல் மாணவி கு.நந்தினி ஆகியோருக்கு
எனது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொ்ளகிறேன். அவர்களை ஊக்குவித்த எம் முதல்வர்
முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், வலையுலக உறவுகளுகம்
நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)