சுகன்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகன்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 மே, 2017

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியவை

மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர்!

👉 நடந்தது என்ன?

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?

என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய

1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.

2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால்,

உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,

👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.


கலாமுக்கு வருத்தம் உண்டு..


Image result for அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஒரே ஒரு வருத்தத்தை வாழ் நாள் முழுவதும் கொண்டிருந்ததாக அவரது உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் உண்டு. அது, 'தனது பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லையே...!' என்பது தான்.

இதனை அவர் அவ்வப் போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

படித்ததில் பிடித்தது



கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"

♥மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

♥திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

♥"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!

♥ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

♥தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

♥இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.

♥இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.

♥கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு




'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.
அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள்.

கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..

"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா.

ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" ..

அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."

நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.

இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு மா!"

திங்கள், 24 ஏப்ரல், 2017

எளிய பாட்டி வைத்தியம்.....



1) வெள்ளைபூண்டையும், தித்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

2) மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயில் ஊர வைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர தலை குளிர்ச்சி பெரும்

3) காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்தால் தலைமுடி கருமையாக மாறும்.

4) மாதுளம் பழச் சுளைகளை வேக வைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

5) வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊர வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்

6) வாழைப்பழத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் தொந்தரவு குறையும்.

7) எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் துங்கும் முன் குடித்து வந்தால் இருமல் குறையும்.

8) அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய் , தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.

9) அத்தி இலையை நன்கு அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.

10) அருகம்புல் சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

படம்

9ன் சிறப்பு தெரியுமா?

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image result for 9ன் சிறப்பு தெரியுமா?


9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச்சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,ஒன்பது வளையங்களால்சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்றுமதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

புதன், 19 ஏப்ரல், 2017

பிரண்டை


பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ஆசிரியர்




பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண்
குழந்தை பிறந்தது
ஊர்
மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்
நின்று கொண்டு
தங்க
நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த
மக்கள் வீது அள்ளி வீசினான்
அங்கு நின்று கொண்டு இருந்த
கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்
வரை
வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க
மன்னனின்
குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம்
பூரித்தான்
மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார்
மன்னர் ஆண் குழந்தை பிறந்த
சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து
அதனை தெரிவித்து மகிழ்கிறார்
என்று சொன்னபோது
மன்னன் குறிக்கிட்டு சொன்னான்
இல்லை இல்லை எனக்கு ஆண்
மகவு பிறந்ததற்காக நான் தங்க
காசு கொடுக்கவில்லை
எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக
ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில்
இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்
அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக
இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற
சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை
அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும்
அள்ளி தூவினான் அவன் சொன்னபடி
பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக
உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற மன்னனின்
மகன் மாவீரன் அலெக்சாண்டர்
ஒரு சிறந்த ஆசிரியரால்
மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக
மாற்றமுடியும்
என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்
ஆசிரியர் அரிஸ்டாட்டிலும்அவன்
நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல்
அவன் நம்பிக்கையை காப்பாற்றினான்.
Always Teachers are Wondering in the world.

வியாழன், 6 ஏப்ரல், 2017

காதல்...

                                                                           
         

டேய்   கிஷோர்  !   உமா ,சங்கவி   ரெண்டு   பேர்ல   யாருக்கு  ஓ.கே  சொல்லப்போற    எனக்கு   குழப்பமா   இருக்குடா !”  என்றான்   மணி.
“ரெண்டு   பேருமே   என்னை   காதலிக்கறாங்கா… உமா   நல்லவ   ஆனா   நடுத்தர   குடும்பத்த சேர்ந்தவ   சங்கவி   ரொம்ப    வசதி   அதனால   நான்    சங்கவிக்கே   ஓ.கே   சொல்லப் போறன்.”என்றான்   கிஷோர்.
இவருக்கு    கல்யாணம்    நடந்து    கிஷோர்    வீட்டோடு     மாப்பிள்ளையானான்   6  மாதங்களுக்குப்    பிறகு ,
கிஷோரும் ,மணியும்   சந்திக்கிறார்கள்  
என்னடா   கிஷோர்     எப்படியிருக்க  ?சங்கவி   எப்படி   இருக்கா  ?என்றான்    மணி  ஆவலாக
“என்  வாழ்க்கையே    நாசம்மா     போச்சுடா” என்று  கூறினான்    கிஷோர்.
“என்னடா   ஆச்சு   ஏன்    அழற    டேய்   கிஷோர்…”  என்று    பதறினான்.
“அவளக்  கல்யாணம்    பண்ணினது   உண்மைதான்டா    ஆனா   அவ  என்னை    மதிக்கவேயில்லை  ,  ஏன்   கேட்க   ஆரமிச்சேன்   இப்ப   விவாகரத்துல    வந்து   முடிஞ்சிருச்சி”   என்று     அழுதான்   கிஷோர்.
ஏன்டா   பணம்   ,வசதி   அவளக்   கல்யாணம்     பண்ணி   நீ   நாசமாப்   போயிட்ட   ஆனால்       உனக்குத்    தெரியுமா?   கிஷோர்    உன்னைக்   காதலிச்சாளே      உமா ,   நடுத்தரக்   குடும்பம்னு   நீ      ஒதுக்கனவ     இன்னைக்கு     அவ  பெற்றோர்     சொன்ன     மாப்பிள்ளையை     கட்டிக்  கிட்டு    நிம்மதியா     வாயறா.   இதுக்    கெல்லாம்       காரணம் ,    உன்னோட      பேராசைதாண்டான்னு      சொல்லிட்டு    சென்று விட்டான்       மணி.
கிஷோருக்கு      எல்லாம்     புரிந்தது,  ஆனால்   காலம்    கடந்துவிட்டது.   என்பது      தாமதமாத்தான்       தெரியவந்தது.


மகள்[ன்]

                                                                             

           கடசியா   என்ன   முடிவெடுத்துருக்கிங்க ?    என்றார்    பஞ்சாயத்துத்    தலைவர் .
            ஆளுக்கொரு    மூளையில்      அமர்த்திருக்க    வண்ணாத்தா    நடு    முற்றத்தில்  அழுது     கொண்டிருந்தாள். 
           இதைப்   பாருங்க     பிள்ளைகளா,      மூத்தவனுக்கு    இந்த  வீடும்    வயக்காடும் ,  இரண்டாவது  மகனுக்கு   தோட்டத்தில    இருக்க   வீடும்     தோப்பும்     மூனாவது   மகனுக்கு      ரைஸ்   மில்லும்       பக்கத்தில      இருக்க   மாடி  வீடும்        கடைசிய       இருக்கறது     உங்காத்தா     மட்டுந்தான்     கடைசி    காலத்தில    யார்    பாத்துக்கப்    போறீங்க.
            இதுவரைக்கும்      அதுவேணும்    இதுவேணும்    இருந்த   பயளுங்க      இப்ப   ஊமை    மாதிரி      பேசாம    இருந்தானுங்க.
             வண்ணாத்தாவுக்கு    செத்து   போலாம்     போலத்   தோணுது    அப்போ    ஒரு   ஆட்டோ    வந்து   நிக்குது      அதுவ  இருந்து      வரவங்களப்   பாத்து   அந்த   வீடே    அதிர்ச்சில    பேய்   பாப்த்த      மாறி    நிக்கராங்க.
           மருமவகாரிகளுக்கெல்லாம்       சொத்துல    பங்கு    கேட்டு      வராங்ளோன்னு    பயம்.
         எனக்கு   என்னோட    அம்மா    மட்டும்    போதும்னு   வண்ணாத்தாக்கைய    புடிச்சி    கூட்டிட்டு    போறாங்க        வண்டில    வந்தவங்க  
          தான்     பெத்த    பையன்       திருநங்கைனு      தெரிஞ்சதும்     வீட்ட  விட்டு   துரத்தினதையும்       இன்னைக்கு   அவனே   தன்னை    காப்பதறதையும்     நினைச்சி  கண்ணீர்    சிந்தினாள்    அத்தாய். 





                                                                                                         

ஊசி

                                   
                         
            “ஏங்க   பிள்ளைக்கு   ரொம்ப  உடம்பு  சரியில்லை  நான்  மருத்தவமனைக்கு  கூட்டிட்டு  போறேன்”  என்று தன் கணவரிடம்   சொல்லிவிட்டு  மூன்று  வயதான  மெளோடு  மருத்துவமனைக்குச்  சென்றாள்.
            பாப்பா   உன்  பேர் என்ன?  என்று  அக்குழந்தையிடம்   கேட்டார் டாக்டர்.
            “பூமிதா”  என்றாள்  குழந்தை 
            “பாப்பாவுக்கு   என்ன  பிடிக்கும் “
            “சாக்லேட், கேக், ஐஸ்கீரீம்  எல்லாம்  பிடிக்கும்.
            `’சாதராண  காய்ச்சல்  தான்  , ஊசி  போட்டா  சரியாயிடும்  கவலைப்படாதீங்க  “ எனெறு  மேகலாவிடம்  கூறினார்  டாக்டர்.
            “அம்மா… அம்மா  ஊசி  வேணாம்மா”.
            “ஒண்ணுமில்லா  பூமிதா வலிக்காது  என்றாள்  மேகலா.
            “நர்ஸ் பாத்து  போடுங்க  குழந்தைக்கு  வலிக்காத  மாதிரி…”
            அழுது கொண்டே  ஐயோ…அம்மா  வலிக்குதுன்னு  டாக்டரை  முறைத்தாள்  பூமிதா.
            டாக்டர்  தன்  நலத்திற்காக தான்  செய்கிறார்  என்பதை  அறியாமல்   அவர்  புதுசா  வாங்கின  கார்  சாவியை  எடுத்து  கொண்டுபோய்  தன்  வீட்டருகில்  உள்ள  கிணற்றில்  போட்டு விட்டாள்   அக்கழந்தை இதையறியாத  டாக்டர்  திணறி  கொண்டிருந்தார்.  தன்  மனைவி கூறிய  சொற்பொழிவை  கேட்டபடி .

            தேர்வு   நன்றாக  எழுதினாயா? என்று  கேட்டு  கொண்டே.   

பிச்சைக்காரன்

                                       


            டேய்     கோவிந்தா  என்ன   கோலம்டா    இது ?    என்ற   பதறினார்  ராமன், கோவிலுக்குள்   போகும்போது   தெரியவில்லை  , வந்த   பொழுதுதான் கவனித்தார்   அங்கு   பிச்சையெடுப்பவர்களில்   தன்னுடைய   ஆருயிர் நண்பனும்   இருக்கிறானென்னு.
            வாடா   வீட்டுக்கு   என்று   கூப்பிட்டார்   ராமன்   .ஆனால்    ,ராமன், கோவிந்தன் வர   மறுத்து   விட்டார்   எனவே   அவரை   வற்புறுத்தி   தன்   வீட்டுக்கு அழைத்துச்   சென்றார்.
            சுமதி ,  இது   என்னோட   நண்பன்    கோவிந்தன்.  இனி   இவர் நம்முடன்தான்   தங்குவார்    என்றுத்  தன்   மருமகளிடம்   கூறினார்   ராமன்  அப்பொழுது   அவள்  ஒன்றும்   கூறாமல்   உள்ளே   சென்றுவிட்டாள்.
மாலை;
            சேகரிடம்   ,ஏங்க   உங்கம்மா   இறந்தப்பவே   உங்கப்பாவை   முதியோர்     இல்லத்தில்   சேர்த்து   விட்டுருக்கனும்   ,போனாப்  போவுது விட்டா   இப்ப   போற   வரவுங்கள   எல்லாம்   கூட்டிட்டு   வந்து   நிக்கறாரே இதுக்கு   மேல   பொறுக்க    முடியாது  உங்கப்பாவை   முதல்ல   எங்கவாது கொண்டு   போய்   விட்டுவிட்டு   வாங்க   , என்று   பொறிந்து   தள்ளினாள் சுமதி.

            இதக்   கேட்ட   ராமனிடம்   கோவிந்தன்  கூறினான்  டேய்   ராமா , இப்ப  இதே   நிலைமையில்    தான்டா   நானும்    இருந்தேன்   ,என்   மருமவ  கையில  சோறு    வாங்கி    சாப்பறதுக்கு    கோயில்    உட்கார்ந்து    பிச்சையெடுத்து  புண்ணியத்தைத்    தேடிக்கிலாம்    என்று    நிறுத்தி   நிறுத்தி    கூறினார்.  இதனுடைய    மறுமொழி   ராமனுடைய   கண்ணிராகவே   வெளிவந்தது .