சிறுகதை - ம.சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை - ம.சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2017

தர்மம் என்றால் என்ன..??


                        
                        தர்மம் என்றால் என்ன ?
             





            தர்மத்தை நிலைநிறுத்த பல போர்கள் நடந்ததாக நம் இலக்கியங்கள் கூறுகின்றன. தர்மத்தை நிலை நிறுத்ததான் மஹாபாரத குருஷேத்திரப் போரும் நடந்தது. மஹாபாரதப் போரில், போர் முடிந்த பின் கிருஷ்ணன் அர்சுணனுக்கு செய்ததும் தர்ம உபதேசம் தான். கர்ணனைப் பொறுத்த வரை கொடை கொடுத்து தர்மம் செய்தார்.
             தர்மத்தை சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தலாம். அது எப்படி என்றால், நமக்கு மற்றொருவர் எந்த காரியங்களை செய்தால் நாம் மகிழ்வாக இருப்போமோ அதை நாம் பிறருக்கு செய்ய வேண்டும். அதைப் போல நமக்கு மற்றவர்கள் எந்த காரியங்களை செய்தால் நம் மனம் வருந்தும் என்று நினைக்கின்றோமோ, அக்காரியங்களை நாம் மற்றவருக்கு செய்யாமல் இருக்க வேண்டும். இதுவே, தர்மமாகும்.