ஆங்கிலத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2018

சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

             சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

1. பலர் தொடங்குகின்றனர் சிலரே முடிக்கிளனர்.( beginners are many         finishers are few)

2. கற்பது கடினம் ஆனால் தோற்றுப்போவது அதனினும் கடினம். (studying sucks but not more than failure )

3.மிகப் பெரிய வெற்றியே மிகப் பெரிய பதில். ( the best revenge is massive success )

4. பணி முடியும் வரை தூங்காதே. (Don't sleep until the job is done)

5. கணவு இல்லாதவர்களுக்கே காரணங்கள் படைக்கப்பட்டன. (Excuses are for those who have no desire to succeed)

6. வைரமாக முதலில் வெட்டுக்களை தாங்க பழக வேண்டும். (To be a diamond, you should have guts to bear cuts )

7. நீ கற்றுக்கொள்ள தயாராக இல்லை எனில் எவராலும் உனக்கு உதவ இயலாது, நீ உறுதியாக இருந்தால் எவராலும் உன்னை தடுக்க முடியாது. (If you are not willing to learn, no one can help you. if you are determined to learn, no one can stop you).

8. உனக்கு நீ ஏற்படுத்திக்கொண்ட சுவருகளே உன்னை தடுக்கின்றன. (You are confused only by the walls you build yourself).

9. நமது முளை ஒரு ஆயுதம் அதில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். (Your mind is a weapon keep it loaded)

10. எல்லா முடிவும் ஒரு புதூ ஆரம்பம். (Every end is a new beginning).

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

                                பகட்டான பக்க பகிர்வ்வுகலால் பயண் இல்லை

ஏதோ எங்கோ இருப்பவர்களுக்கு நாம் நமது சமூக வலைதலங்களில் பதிவு செய்யும் விருப்பமோ, கருத்தோ, பக்க பகிர்வுகளோ எந்த விதத்திலும் உதவாது. இந்த படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்துவிட்டு நிஜ வாழ்வில் அவர்களை கடந்து செல்லும் போது கண்டும் காணாமல் கூட போவது எப்படி பட்ட செயல் என்றால், படித்து பட்டம் பெற்றும் சிந்தித்து செயல்படாது இருப்பதற்க்கு சமம்.


ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

 ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

இவரது பெயர் தாண்டோ கேஷவ் கார்வ்.இவர் இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாவார்.குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியிலும், தனிமனித சுதந்திரத்திலும், விதவைகளுக்கு மறுமனம் செய்வது மற்றும் சாதி ஒளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர்.இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முறுட் என்ற சிறிய இடத்தில் பிறந்தார். இவரை ``மகரிஷி கார்வ் அல்லது அன்னா கார்வ் என்று அன்புடன் அழைப்பர்.தனது 14ஆவது வயதில் திருமணம் செய்தவர். பூனாவில் இருக்கும் ஃப்பெர்குசான் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தவர். தன்னை சுற்றி இருந்த விதவைகளின் அவல நிலைகண்டு அவர்களுக்கு உதவ ``வித்வ விவஹோட்டஜாக் மன்னாலி( விதவைகள் மறுதிருமண அமைப்பு) என்பதை 1883ஆம் ஆண்டு நிறுவினார்.
இவர் செய்த சாதணைகள் பற்பல,
1.இந்தியாவின் முதல் மகளீர் கல்லூரியை (ஸ்ரீமதி ந்திமாய் தாமோதர் தாக்கர்சே) நிறுவியவர் இவரே.
2.1936 இல் மாகாராஷ்ட்ராவின் சிறு கிராமங்களிலும் ஆரம்ப் பள்ளிகளை துவங்கினார்.
3.1944ஆம் ஆண்டு ``சமதா சங்” (மனித சமத்துவ குழு) நிறுவினார்.
1955ஆம் ஆண்டு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா வருது பெற்றார்.அந்த அதே ஆண்டு அவரது புகைப்படம் அஞ்சல் பொறிப்பிலும் வெளியிடப்பட்டது.



4.குயின் ரோடு என்ற சாலை பிற்காலத்தில் மகரிஷி காரவ் என்று மாற்றிஅமைத்தனர்.

உன்னால் என்ன இயலும்!

  உன்னால் என்ன இயலும்!

நாம் அனைவராலுமே அனைத்து சாதனைகளும் புரிய இயலாது, ஆனால் நம் அனைவராலும் முயற்ச்சி என்ற ஒன்றை செய்ய இயலும். அத்தகையான விடாமுயற்ச்சியாலே பலர் இவ்வுலகில் சாதித்துள்ளனர். ஆகையால் நாம் விடாமுற்ச்சியை மேற்கொண்டால் வாழ்வில் மலரலாம்.


அவசியத்தை தெரியாது செயல்படுவோர்கள்

                                அவசியத்தை தெரியாது செயல்படுவோர்கள்


இந்த உலகின் ஆகப் பெரிய அறிஞர்களும், தலைவர்களும், மகத்தான மனிதர்களும், போர் வீரர்களும் நிறைய மதிப்பெண்களோ பட்டங்களோ பெற்றிருக்கிறார்களா என்பது கோள்விக்குறி? ஆனால், அவர்கள் அனைவருக்கும் அறிவானது நல்ல பல புத்தகங்களாலும், அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல அறிஞர்களின் கருத்துக்களாலும்தான் என்பது மிகப்பெரிய உண்மை. இதனை மிகச் சிலரே புரிந்து நடந்து வாழ்வில் பயண் பெருகின்றனர்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வழி செல்வோம்

                                     வழி செல்வோம்

நாம் அனைவரும் இந்த உலகிற்க்கு ஒரு காரணமாக தான் வந்திருப்போம். சில நபர்கள் அந்த காரணத்தை கண்டறிந்து நல்ல ஒரு சமுதாயத்தை உறுவாக்குவதற்க்காக உழைத்து உயிர் துரந்திருப்பர் சிலர் அந்த காரணங்களையெல்லாம் அறியாமலேயே செத்து மடிவர். சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிறுப்பர். மனிதனாக பிறந்தால் நாட்டிற்கும் வீட்டிற்க்கும் ஏதாவது செய்வதே அவனது தலையாய கடமை. இதனை நம்மில் சிலர் தெரிந்திருப்பர், சிலருக்கு இதனை பற்றி அக்கறை இல்லை. நாட்டில் உள்ள இளஞர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்து சென்று சேர்க்க வேண்டியது மூத்தோரின் கடமை. ஆனால், இங்கோ, கூத்தாடிகளின் பின் சென்று வாழ்கையையும் நாடகம் போல் போலியாக அற்த்தம்மற்றைவயாக வாழ்ந்து வருகிறோம். யார் உண்மையான வீரர்கள்,, யாரை உண்மையாக மதிக்க வேண்டும், ஏன் நம் நாடு இந்த நிலமையில் உள்ளது?அதை திருத்துவது யாருடைய கடமை?என்று நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்க்க வேண்டும் என்று அன்று சான்றோர் பெறுமக்கள் கூறுவது ஒரு தெளிவான பார்வை கிடைக்கவே!!! சிந்திப்பீர்! செயல்படுவீர்!


                                                

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?

மனிதானாக எந்த ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்?


மனிதனாக அனைத்து உயிரிணங்களுக்கும் சிரசமமான அன்பினைக்காட்ட வேண்டும்.தெருவில் செல்லும் நாயோ, விட்டில் வளற்க்கும் பெர்ஷியா பூனையோ?அனைத்தும் இந்த மண்ணில் சம உரிமை பெற்றுதான் வாழ நம்மை போல வந்திருக்கிறன. ஒருவர் படிப்பில் சரியாக இல்லை என்ற காரணத்திள்காக அவரை ஒதுக்குவது சரியல்ல. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலே போதும் இந்த உலதில் அனைத்து பிரச்சணைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.நம்பிக்கையை உடைப்பது மிகவும் கொடுமையான விஷயம்.

மனக்கஷ்டத்தில் இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?

மனக்கஷ்டத்தில் இந்த மாய உலகைவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் என்ன செய்வீர்?

உடுத்த உடை,
உண்ண உணவு,
உறுதியான உடல்,

உள்ள எவன் ஒருவன் இருக்கிறானோ அவன்தான் இந்த உலகின் ஆகப்பெரிய பண்க்காரண். இந்த உண்மையை புரிந்து கொண்டு இருப்பதை வைத்து வாழ்ந்து நடத்தினாலே மனநிறைவுடன் அற்த்முள்ள வாழ்க்கையை வாழலாம்.

மக்களின் வேற்றுமை

                                                                மக்களின் வேற்றுமை
யூ-டியூப் என்று சொல்லப்படும் கானொலி தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒரு சமூக சோதனை(SOCIAL EXPERIMENT) என்று சொல்லப்படும் கானொலியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கானொலி வெளிநாட்டவரால் பதிவு செய்ய்ப்பட்டது. அதில் தனி மனிதன் ஒருவன் என் நன்பனிற்க்கு அவசர உதவி தேவைபடுகிறது என்று வீடு வீடாக அழைந்து கேட்கிறான் அது கிருத்துமஸ் விழா நாளும் கூட எனினும் மக்கள் இல்லை, எங்கள் வீட்டில் பிள்ளைகள் உள்ளனர், உங்களை யார் என்று தெரியாது, நாங்கள் அன்னியற்களை அனுமதிக்க மாட்டோம், என்று பர்பல காரணங்கள் கூறி புரகனித்தனர், இருதியில் அந்த வகை உதவியையே பெண் ஒருவரை வைத்து நடத்தினர்.அப்பொழுது சிலர் முன் வந்தனர்.


அதே சமயம் எங்கள் வீட்டில் ஒரு தாயார் கதவை தட்டினார். ``எனது மகள் இங்கே இசை பயிற்ச்சிக்கு வந்திருக்கிறாள், அங்கு பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது, நான் இந்த தின்னையில் அமரலாமா?’’ என்றார். நான் உடனடியாக அவரை அனுமதித்தேன்.சில வற்றை நமது முன்னோற்கள் அறிந்து அதனை நமது பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தின்னை, உதவும் மனப்பான்மை இவை அனைத்தும் நமது கலாச்சாரத்தில் சொல்லாமல் சொல்லப்பட்ட மிகப்பெரிய வாழ்க்கை பாடங்கள், மற்றும் அவை நமக்கு போதிக்கப்பட்ட ஒழுக்க நெரிகள். ``தீயன செய்தவனுக்கும் நல்லதே செய்” என்று கூறி வளர்த்த என் அன்னை தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொறு நொடியும் நான் ஒரு தமிழச்சியாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

பேனா

                                                                                பேனா

சிலர் எழுதிய பேனா,
இன்னும் கணக்கு பார்க்கிறது
சிலர் எழுதிய பேனா,
பல சரித்திரம் படைக்கிறது!!!

(இதை நீங்கள் கவிதையாக பாவித்துக்கொள்ளலாம்) கரு இதுதான்; சிலர் பயண்படுத்திய பேனாக்கள் இன்னும் அவர்கள் வீட்டுக் கதவிற்க்குள்ளே கிடக்கும், ஆனால், சிலர் பயண்படுத்திய பேனாக்கள் மட்டுமே அனைவராலும் காக்கப்படும். நாம் சாமானியனாக வாழ்வதும் சரித்திரம் படைப்பதும் நம் கையில் உள்ளது.

நேரம்

                                                                                நேரம்

வாழ்வில் இதை சரியாக பயண்படுத்தியவர் எவரும் தோற்றதில்லை. பெளும்பாலான மக்கள் எனக்கு இது போதவில்லை இது சரிவர வில்லை, என்னிடம் இது இல்லை என்று சாக்குகள் கூறியே காலத்தை களிக்கின்றனர்.
நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை காட்டிலும் இருக்கும் பொன்னான நேரங்களை சரியான முறையில் பயண்படுத்தினால், வாழ்க்கை அற்த்தமுல்லனவாய் அமையும். வாழ்வில் எந்த சூழலிலும் பிறறை பார்த்தோ, பின்னே செல்லவும் கூடாது. எல்லாரும் எதோ ஒரு வகையில் தனிதுவம் வாய்ந்தவராக தான் இருக்கிறோம். அதனை புரிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வெற்றி என்பது வியர்வை சிந்தி, உழைத்து, அவமானங்களை சந்தித்து, போராடி, கிடைக்கும்போதுதான் அதனை ஒருவனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். வலிகளில் சிக்கித் தவித்வனுக்கே உழைப்பின் வெற்றியை முழுமையா ருசிக்க முடியும்.

நான் வேண்டாம்!!

                                                                நான் வேண்டாம்!!

இந்த உலகில் நாம் அனைவரும் தோன்றியதற்க்கு நிச்சையமாக ஒரு காரணம் இருக்கும். அதனை நாம் சாவதற்க்கு முன்பு கண்டறிந்து அந்த துறையில் நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இருங்கள், வளர்த்த பின்பு, அந்த துறையில் தலைசிறந்த மனிதராக மாறிய பிறகு, நம்மை வளர்த்த இந்த சமூகத்திற்க்கு திரும்ப செய்ய நாம் மறந்து விடுகிறோம். இந்த உலகிற்க்கு வந்துள்ளொம், அதற்க்காக கட்டாயம் எதாவது செய்துவிட்டுதான் செல்லவேண்டும். நாம், நம் வேலை, நம் குடும்பம், என்று வாழ்பவர்கள் தேவையில்லை இந்த தமிழ் சமுதாயத்திற்க்கு. நாம், நமது மக்கள், நமக்கு சஞ்சலம் அதனை சரிசெய்யும் கடம் நாம் அனைவருக்குமே உண்டு என்று நமது ஒற்றுமை மனப்பான்மையுடன் இறங்கி செய்தால் இந்த சமுதாயத்தில் நிறைய பல இன்னல்களுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்.

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?


இந்த நாட்டில் நாம் விரும்போது யாரையும் நாம் அழைத்துவரவில்லை, பாதுகாப்பு என்பது ஒரு வேலி அதற்க்குள் இருக்கும் வரை நாம், நமது குடும்பம், நமது வாழ்க்கை, நமது முன்னேற்றம், என்று பலரால் சுயநலவாதிகலாக்கப்படுவோம். ஆனால், என்று என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்!!!! நான் இந்த உலகில் என்னைபோன்று வாழ வந்தவர்களுக்கும், இந்த சமூதாயத்திற்க்கும் கடமைபட்டிருக்கறேன் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோர் வாழ்வில் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும், துச்சமென மதித்து செல்வர்.

மாற்றம் வேண்டும்!!!

                                                        மாற்றம் வேண்டும்!!!


நாம் எப்போழுது அடுக்கு மொழிகளையும், பொய்யான வாக்குருதிகளையும், கண் கவரும் காட்சிகளையும், பொய்யான பாசங்களையும், பொய்யான மனிர்களையும், தற்காளிக இன்பத்தையும் நம்பாமல் இருக்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தெளிவாக செயல்பட இயலும். இன்னும் எத்தனை காலம் விடியல் பிறக்கும் என்று காத்துக்கொண்டே இருப்போமோ? இன்னும் எத்தனை காலம் இவர் நம்மை மாற்றுவாரா?அவர் நமக்கு உதவுவாரா இவர் நமக்கு உதவுவாரா?இவர்களின் பார்வை நம் மீது விழாதா? அவர் நமக்கு இரக்கம் காட்ட மாட்டார்? என்று பிறரை எதிர்ப்பார்த்து, எதிர்த்து ஏமாந்து போவதே அதிகமாயிற்று. தன்னம்பிக்கையுடனும், நம்மை நம்மால் மட்டுமே திருத்த இயலும் அந்த ஆற்றல் நமக்குள்ளே புதைந்து கிடக்கிறது என்று கண்டுகொள்கிறோமோ!!! அன்று நல்ல ஒரு சமுதாயம் பிறக்கும்.

தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்

                                தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்
1.இந்தியாவில் மகாராஷ்ராவை இடுத்து பெரிய ஒழுக்கமைவு(economy) கொண்ட மாநிலம்.
2.மனிதவள மேலான்மை பொருளடக்க அட்டவனையில் 6ஆம் இடம் பிடித்துள்ளது தமிழகம்.

3.81%படித்தவர்களை கொண்ட மாநிலம்.
4. ஐ.டி.வணிகத்திலும், BPO சேவைகளிலும் சென்னை மாநகரம் தான் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது.

5.கமுதி, என்னும் தமிழகத்தை சேர்ந்த பஞ்சாயதில் 648மெகாவாட்ஸ் சோலார் சக்தியுடன் 150,000ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் அளவிற்க்கு தயாரிக்கின்றனர்.

சோம்பல் கூடாது!

                                                           சோம்பல் கூடாது!

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி அனைவருக்குமே உண்டு, ஆனால் அந்த சாதணையை எப்படி நிகழ்த வேண்டும் என்று புரியாமலேயே பலர் நாட்களை வீணாக களித்து வருகின்றனர். எவன் ஒருவன் வெற்றி பெற நினைக்கிறானோ, அவன் நிச்சயம் கடின உழைபாலியாகவும் நல்ல நூல் அறிவு பெற்றவனுமாய் இருக்க வேட்ண்டும். தன்னையும் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பற்றி நல்லறிவு கொண்டவாய் இருக்க வேண்டும். மனிதனாய் பிறந்தாளா ஏதாவது சாதித்தே ஆகவேண்டும். 

தம்மை சுற்றி நடக்கும் பிரச்சணைகளைப்ப பற்றி கவலை படுபவனாய் இருக்க வேண்டும், வருமையில் வாடுபவர்களைக் கண்டு வருந்தி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வனாய் இருக்க வேண்டும். அடுத்தவர் பேச்சிர்க்கு காது கொடுக்காமல், நியாமான காரியங்களில் யார் தடுத்தாலும் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு போக கூடாது, தன்னை தானே ஊக்குவித்துக்கொண்டு, வாழ்வில் முன்னேற்ற பாதையை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.

சேஞ் யூவர் ஸ்ராடஜி

                                                சேஞ் யூவர் ஸ்ராடஜி
ஒரு நாள் கண் தெரியாத மனிதர் ஒருவர் வளாகத்திலே அமர்ந்துகொண்டு யாசம் செய்துகொண்டு இருந்தார். பின்பு, அங்கு வழியில் கடந்து சென்ற மனிதிரில் ஒருவர் அங்கு வந்து அவர்முன் நின்று அவரது தட்டில் இருக்கும் சில சில்லரைகளை பார்த்தார். அவர் வந்து நின்றதை இந்த கண் தெரியாத யாசகரும் கவணித்தார். அவர் வைத்திருந்த அறிவிப்பு பலகையை எடுத்து சிறு மாற்றம் செய்துவிட்டு சென்றார்.

     சில நேரங்களில் அவர் வைத்திருந்த தட்டில் சில்லரைகள் அதிகரிக்க தொடங்கின. மாலை நேரம் போல் அந்த அறிவிப்பு பலகையை மாற்றி அமைத்த அதே நபர் வந்தார். அவரது கால்களை தொட்டு யாசகர் அவர்தான் காலை தனது பலகையை மாற்றினார், அதற்க்கு பின்பே தனது தட்டில் சில்லரை அதிகறித்தது என்பதை தெரிந்து அவர் என்ன எழுதினார் என்று கேட்டார். அவர் அதற்க்கு``என்று நல்ல இளவெனில் காலை, ஆனால் என்னால் அதை பார்க்க இயலவில்லை”TODAY IS SPRING AND I CANNOT SEE IT என்றார்.

                                       தரவு(short stories குருஞ்செயலி)


ஒற்றுமையின் வேற்றுமை உணர்த்தும் வாக்கியங்கள்;

ஒற்றுமையின் வேற்றுமை உணர்த்தும் வாக்கியங்கள்;

சச்சின் டென்டுள்கள் படத்தின் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது?

(நீங்கள் அமெரிக்காவிற்க்கு சென்றால், அமெரிக்கர்களை சந்திக்கலாம், ஜெர்மெனிக்கு சென்றால் ஜெர்மானியர்களை சந்திக்களாம், ஃப்ரான்ஸிர்க்கு சென்றால், ஃபிரென்ச்சுகாரர்களை சந்திக்கலாம்,இங்கிலாந்திற்க்கு சென்றால் இங்கிலிஷ்காரர்களை சந்திக்கலாம். ஆனால், இந்தியாவிற்க்கு வந்தால் மட்டும் தான் நீங்கள் மராத்தியர்கள், குஜராத்தியர்களையும், பஞ்சாபியர்களையும், மலையாளிகளையும், சந்திக்க நேரிடும். இந்தியர்களை நீங்கள் பாக்கிஸ்தானிற்க்கும் இந்தியாவிற்க்கும் கிரிகெட் விளையாடும்போது மட்டுமே பார்க்கலாம்.

சிந்திக்கத்தக்க புகைப்படங்கள்;

                    சிந்திக்கத்தக்க புகைப்படங்கள்;
1.   நாட்டுப்பற்றைப் பற்றி பேசுகிறோம், பாடுகிறோம்! எனினும்? செயல்களில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை போல?


2.   இன்னும் பல இடங்களில் பெண் சிசு கொளை நடக்கிறது. ஆனால் அதே இடங்களில் பெண்களையே மருமகளாக வர வரண் தேடுகிளார்கள்.





ஒரு இலக்கோடு வாழு!

                                                                ஒரு இலக்கோடு வாழு!


இலக்கு இல்லாத வாழ்க்கை புத்தகம் இல்லாத நூலகம் போல், அது நமக்கும் பயணளிக்காது பிறருக்கும் பயணளிக்காது. ஒரு இலக்கை வைப்பது கூட எளியது, ஆனால் அதனை நோக்கியே சோர்வடையாமல் பயணப்படுவது மிகக் கடினம். நம் இலக்குகள் நமக்கு மட்டும் பயண் தரும் வகையில் இருக்கக் கூடாது.நாம் அதனை அடையும்போது நமக்கும் நமது சமூகத்திற்கும் பயணளிக்க வேண்டும. எவன் ஒருவன் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் பற்றி சிந்திக்கிறானோ?அவனால் தான் ஒரு உபயோகமான வாழ்க்கையை வாழ முடியும். அப்பொழுதான் நாம் இம்மண்னை விட்டு நீங்கினாலும் நாம் செய்த செயல்களால் பிற சந்ததியனரால் பேசப்படும். எல்லோரையும் பற்றி இந்த உலகம் போசும் ஆனால், அவர்களை எந்த வகையில் நம்மை பற்றி பேச வைக்கிறோம் என்பதிலே அற்த்தம் உள்ளது. ஒருவர் நம்மை இகழ்வதற்கும், புகழ்வதற்க்கும் முழூ பொறுப்பு நாம் தான்.