வெள்ளி, 4 ஜனவரி, 2019

தன்னம்பிக்கை💪💪💪





   
       இன்று கோவிலுக்குள் நுழையும் போது முதலில் பார்ப்பது பிச்சை காரர்கள் தான். சில குழந்தைகள் பெற்றோர் கைவிட்டதால் , சில பிள்ளைகள் பெற்றோரை கைவிட்டதால் இந்த முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இதில் மன்னிக்க முடியாத ஒரு வர்க்கம் இருக்கிறது. கால் கை நன்றாக இருந்தும் அதை பயன்படுத்தாமல் சோம்பேரி தனமாக தன் வாழ்க்கையை பிச்சை எடுத்து களிக்கின்றனர்.  இப்படி இருக்கையில் சில  மாற்றுத்திறனாளிகள் உழைத்து உண்கின்றனர் .அப்படி பட்ட ஒரு மனிதனை தான் நான் தினமும் காலையில் பார்கிறேன். ஒரு மரத்தடியில் ஒரு பலகையின் மீது தன்னால் முடிந்த அளவு காய்கறிகளை வாங்கி விற்பனை செய்கிறார். நமக்கு எளிதாக ஒரு பொருள் கிடைத்தால் அதன் அருமை தெரியாது. அது போல தான் இந்த உலகத்தில் பலர் அனைத்து உறுப்புகள் உள்ள நிலையிலும் யாருக்கும் உதவாமல், சுயநலமாக வாழ்கின்றனர். நாம் எத்தனையோ பொருள்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குகிறோம் , ஆனால் இது போல் உள்ளவர்களுக்கு உதவ விரும்பினால் அவர்களிடம் ஒரு பொருளாவது வாங்கி உதவி புரிவோம். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக