திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு

           

           
     
  பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி, கேளிக்கை கொண்டாடத்தில் ஈடுபட்டு புத்தாண்டை கொண்டாடுவதை விட ஒரு நிமிடம் மனதார இறைவன் இடம் பிராத்தனை செய்து, தாய் தந்தை இடம் ஆசி பெற்று கொண்டாடும் புத்தாண்டு இன்னும் மகிழ்ச்சி ஆனது.
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

Women are holy books

Women are holy books
They are sacred ones to be preserved...
They are God sent,
They should be cherished,
Not suppressed.
They are not wastepaper
To crush and throw away...
Set her free with peace and harmony.
When one depressed they feel
      Enthused on smelling her
This fragrance.
It may one's beloved or saviour
  Of one in their womb.
It makes me feel
      That I am born today.
It makes me feel delighted.
It gives me strength.
Only mother’s aroma can do this magic.
Yes,the best thing in the world is
  'Mother' and they are women...
I feel pride to be a women.

நட்சத்திர மாணவர்


‘10 திருக்குறள் எழுதினால் அபராதம் இல்லை’


பெரம்பலூர்: பெரம்பலூரில்  வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஹெல்மெட் அணியாத மாணவர்களுக்கு 10 திருக்குறளை எழுத கூறி வினோததண்டனை அளித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது. பெரம்பலூர் போக்குவரத்து காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருபவர் நாவுக்கரசர். இவர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த  நான்கைந்து இளைஞர்களை மடக்கினார். அவர்களிடம், ‘‘ஏன் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்’’ என கேட்டார். அவர்கள் நாங்கள் பள்ளியில் படிக்கிறோம், கல்லூரியில்  படிக்கிறோம் என்ற பதில்களைத் தெரிவித்துள்ளனர்.

உடனே அவர்களிடம், ‘‘நீங்கள் மாணவர்கள் என்றால் அபராதம் செலுத்தவேண்டாம். ஆளுக்குப் பத்து திருக்குறளை எழுதிகாட்டிவிட்டு செல்லுங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இதற்கு, தங்களுக்குத் தெரிந்த  திருக்குறளை எழுதிக்கொடுத்தனர். அதில் சிலர் மற்ற மாணவர்கள் எழுதியதைக் காப்பியடித்தும் எழுதினர். மாணவர்கள் எழுதிய திருக்குறகளை வாங்கிப்பார்த்த இன்ஸ்பெக்டர் காப்பியடித்தீர்களா எனக்கேட்டு சிரிக்கவும்,  மாணவர்கள் பதற்றம் தணிந்தனர்.பிறகு அவர்களிடம் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், லைசென்ஸ் வாங்கிக்கொண்டு பைக்கில் செல்லுங்கள், பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செல்வது போல், ஹெல்மெட்  இருக்கிறதா, லைசென்ஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லுங்கள், நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை எனக்கூறி அனுப்பிவைத்தார்.இன்ஸ்பெக்டர் நாவுக்கரசரின் இந்த வித்தியாசமான அணுமுறையை சாலையோரம் செல்லும் மற்றவர்கள் செல்போன்களில் படமெடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்பெக்டர்  நாவுக்கரசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது....

நன்றி தினகரன் நாளிதழ்

வியாழன், 27 டிசம்பர், 2018

My Brother

That one creature...

Who always irritates me...!
Who always teases me...!
Who always steals things from me...!

But he is the one,

Who always loves me...!
Who always care for me...!
Who always stands behind me...!

No matter,
He is elder or younger,
Tall or short,
Handsome or fluffy,
Intelligent or idiot,
Famous or one among hundreds.

He is still MY brother.

இயற்கையின் கோரதண்டவம்🌊🌊


           

        அன்று 26 டிசம்பர் 2004, 8 மணி கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடிவிட்டு ஊரே கோலாகலமாக இருந்த தருணம் அது. பலரின் வாழ்க்கையை திசை திருப்பிய நாளும் அது தான். பலர் தன் சொந்தங்களை இழந்த நாளும் அது தான். இத்தனை நாள் கடலின் அழகை ரசித்த அனைவரும் அன்று கடலின் மறுபக்கத்தை பார்த்த நாளும் அது தான். ஏதோ நிகழ போகிறது என்று உணர்வதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆம் அது தான் சுனாமி. ஒரு மாபெரும் படை எவ்வாறு பொறிடுமோ அது போல் அனைத்தையும் வீழ்த்தி விட்டது அந்த சுனாமி.சுனாமி பேரழிவு ஏற்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அந்த அழிவு கொடுத்த வலியும் வேதனையும் இன்னும் மறையவில்லை. வேகமாக நம் வாழ்வு  சுழன்று கொண்டு இருப்பதால் நம்மை தாங்கி சுழன்று கொண்டு இருக்கும் பூமி அன்னையை மறந்துவிட்டோம். அதனால் தான் என்னவோ நான் இருக்கிறேன் என்று நினைவூட்டும் விதமாக அடிக்கடி ஒரு பேரழிவை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.

புதன், 26 டிசம்பர், 2018

நிலையில்லாத வாழ்க்கை 🌏🌏



     

இன்று இரவு நாம் தூங்கிய தூக்கதில் இருந்து காலை எழுந்தால் அது ஒரு புதிய நாளின் தொடக்கம் இல்லையெனில் மரணம் என்னும் புதிய வழியின் தொடக்கம். இந்த பதிவை எழுத தூண்டியது என் தோழி தந்தையின் மரணம். காலை சென்றவர் வீடு திரும்பவில்லை இரவு 11மணிக்கு அவர் இறந்து போனார் என்ற செய்தி தான் வந்தது. இப்படி நிலையில்லாத வாழ்கை தான் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக, பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாமல் , பிறரின் மனதை புண் படுத்தாமல், குறை கூறாமல், பெற்றோரை மகிழ்வித்து வாழ வேண்டும். 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது.
அதற்கான சான்று.

சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள்.

நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள்.

நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள்.

மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள்.

ஆனால்.

இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான்.

ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார்.

ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது.

அறிவியல் முதல் ஆன்மீகம் வரை

பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்...

பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது.

ஆனால் இன்று பெண்கள்

பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும்.

பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு.

பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது.

அவர்கள் எங்கும் எல்லாவற்றிலும் சாதிக்கிறார்கள் என்பதற்கு நாங்களும் ஒரு சான்று தான்.

வானமும் எங்களுக்கு தொட்டு விடும் தூரம் தான்.
இனி அதையும் நாங்கள் எங்கள் உழைப்பைக் கொண்டு எட்டிப் பிடிப்போம்.

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா.

மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.

இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.

கண்ணியம்

கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம்.
எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம்.
எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார்.
அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள்.
அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார்.
இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார்.

உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார்.

அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது.

இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் ஒரு படி உயர்ந்தது.

உண்மையிலெ இது போன்ற ஆசிரியர்களை எல்லாம் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்வாய் இருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் எங்கள் பொறுப்பாசிரியர் சங்கர் சார்.

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம்.
ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.

ஆறிலிருந்து அறுபது வரை




நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள்.
நாம் மெல்ல மெல்ல நடப்போம்.
எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மைஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன்.
நாம் வளர்ந்திருப்போம்.
அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌.
நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை கவனிப்பார்கள்.

அவர்களை திட்டுகிறோம்.
இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம்.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன்.
நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
யோசித்துப் பாருங்களேன்.
இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம்.
ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

எது காதல்??💓💓

       
           

   இன்று மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொது ஏதோ ஒரு ஆசையில் பிறர் மீது விருப்பபடுவது சாதாரண ஒன்று. ஆனால் இந்த அன்பு காதல் என்ற புதிய அத்தியாயத்தை அடையும் போது தான் அது விபரீதம் ஆகிறது.  எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்ளாமல் சிலரின் வாழக்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுகிறது. காரணம் வாழ்க்கை பற்றின சரியான புரிதல் இல்லாதது தான்.

       காதல் தவறில்லை 
       தோழிகளே காதல் தவறில்லை
       ஆனால் தவறான நேரத்தில்,
       தவறான புரிதலில், தவறான             நபரோடு ஏற்படும் போது  
       காதல் தவறாகி விடுகிறது.

புதன், 19 டிசம்பர், 2018

அன்பே மனிதம் 👼👼


           

மனிதனுக்கு  மனிதனே கருணை காட்ட மறுத்ததால் தான் இன்று நமக்கு இயற்கை கூட கருணை காட்ட மறுகிறது. சாலையில் விபத்து ஏற்பட்டால் அம்புலன்ஸை கூப்புடுவதை விட போட்டோ எடுத்து whatsupp ல் ஷேர் செய்து இதை பகிர்ந்தால் ஓர் உயிரை காப்பாற்றலாம் என்று வதந்தியை பரப்பும்  கும்பல் தான் அதிகம். நாம்  இந்த உலகில் மனிதனாய் வாழ்வதை விட மனிதாபிமானம் உள்ள ஒருவனாக வாழ்வது கடினம். எனவே சமூக வலைத்தளங்களில் வெறும் போட்டோக்களை பகிர்வதை விட ஒரு உயிருக்கு மற்றோரு உயிர் அன்பை பரிமாற்றம் செய்ய வேண்டியது தான் இன்று அவசியமான ஒன்று. நாம் எவ்வாறு வாழ்க்கையை அன்போடு வாழ்ந்தோம் என்பது நாம் இறந்தபின் நமக்காக உண்மையாக எத்துணை பேர் வருத்தப்பட்டனர் என்பதில் தான் உள்ளது. எனவே பணம், பொருள் என்று சுயநல வாழ்க்கையை விடுத்து அன்போடும் கருணையோடும் வாழுவோம். ஏனென்றால் அன்பே மனிதம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

அன்னை தமிழ்

                            தமிழ்

 நான் சிகரமாய் எழுந்து நிற்க
 என் சிந்தனை சிறந்து விளங்க
 என் கற்பனையும் கடலெனப் பாய
 எழுத்தறிவில் நான் சிறக்க
 தன்னை கருவியாகத் தந்த  
 என் அன்னை தமிழுக்கு                                                   அடிபணிகிறேன் 

வெள்ளி, 14 டிசம்பர், 2018

மகளிரின் மாண்பு

            பெண்ணின் பல வேடம்

                            பெண்

 கற்பனைகளின் கடல்,              கனவுகளின் அரசி,            கவிதைகளின் உருவம்,  கஸ்டங்களின்  கவரி,                    அவள் தான் பெண் ! ! ! ! .

                             மகள்

 தாயின் அன்பை சுவாசித்து,          தந்தை   அன்பை நேசித்து,                      குடும்ப   நிலையை யோசித்து,  பிறருக்காக யாசிக்கிறாள்,              ஒரு நல்ல மகள் ! ! ! .

                             மனைவி

 தன் வீட்டினை மறந்து,                        புது வீட்டினை  அடைந்து,  அனைவரின் குணம்  அறிந்து,  துன்பங்களில் துவண்டு,  கஸ்டங்களில் கவிழ்ந்து,      கரைசேரும் படகாய்            வாழ்கிறாள் மனைவி ! ! ! .

                                தாய்

 தன் பிள்ளையை
            கருத்தில்  கொண்டு ,
 பிறர் உண்ட
            மிச்சத்தை உண்டு ,
மணம் குறையாத
            மல்லிகை செண்டு ,
போல தாயோ
            பூவுக்குள் சிக்கிய வண்டு ! ! ! . 

வியாழன், 13 டிசம்பர், 2018

தனி மனித ஒழுக்கம்







  குறைந்த ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளது. தனது இந்த இடத்தை தக்க வைத்து கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது சிங்கப்பூர். ஒரு நாடு ஊழல் அற்ற நிலையில் இருக்க வேண்டும் என்றால் அரசின் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க வேண்டும் என்பதை தாண்டி  தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியமானதாகும். இன்று நம் உலகில் படிக்காதவர்களை விட படித்தவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் காரணம் எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கி விடலாம் என்ற எண்ணம் தான் காரணம். இதை போல் நம் நாடும் ஊழல் அற்ற நாடாக  முழுவதும் மாற வேண்டும் என்றால் தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்.

புதன், 5 டிசம்பர், 2018

வெற்றிப்பாதை

சிந்தித்து வாழ்வோம் சிதைந்த
நம் வாழ்வை சீர்திருத்த
முயன்று வாழ்வோம் நம்
வாழ்வில் தலைநிமிர
தோல்விகளால் சோர்வடையாமல்
தன்னம்பிக்கையில் துணிந்து
பயணிப்போம் வெற்றியை நோக்கி

Politicians

People call them as
Members of Parliament
But
They're not so...
Only for name not for working
They care for their fame
Not for people.

They fight for movies
Not for poverty
This is real INDIA.

I'm


 Yes! I’m adamant
     But give off when I wish
I’m arrogant but
     I become tender when needed.
  I’m stout and rough, with
      Beauty in heart.
  I know what I’m doing
      And the result is mine.
  I don’t want to change...
      But surroundings try to change me
  I’m sure I won’t because,
     I’m the real me
The predominant women.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம்

சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது.
ஆனால்
அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சமுதாயம்
முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால்
முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படித்தான்
ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு
மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது.

சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது.

வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று.

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால்
பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும்.

இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே.

எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்...

ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர்.

ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர்.
அன்று தொழில் சாதியாய் மாறியது.
இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கரும்பலகையில் எழுதி சொல்லிக் கொடுத்து விட்டு
சாதிச் சான்றிதழ் எங்கே என்று கேட்கின்ற சமூகத்தில் வாழ்கிறோம்.


சாதிகளை கடந்தும் இன்று மனிதர்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
படித்தால் தீட்டு என்றார்கள்.

அப்படிப்பட்ட அம்பேத்கர் தான் அரசியலமைப்பு சாசனத்தையே தீட்டினார்.

யாருடைய கை படக்கூடாது என்று நினைத்தார்களோ அவருடைய கை பட்டதனால் தான் வைகையே சுத்தமானது.

சாதனைக்கு பின் சில நேரங்களில் சாதி மறைந்து விடுகிறது.

 இளைஞர்களுடைய நட்பு சில சமயங்களில் சாதியை எதிர்க்கிறது.
சில சமயங்களில் எரிக்கிறது.

வாக்கு செலுத்தும் போது பயன்படாத சாதி
வாழ்வதற்கு மட்டும் பயன்படுகிறது.

 ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல.
சாதிக்கப் பிறந்தவர்கள்.

 இந்த பதிவை நான் எழுதுவதற்க்குக் காரணம்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒரு வசனம்.

நீங்க நீங்களா இருக்குற வரையும் நாங்க நாயா இருக்க வேண்டியது தான்.

இந்த வசனம் தான்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.