வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மரணத்தின் கைபிடியில்


மரணம் -அனைவருக்கும்  நிகழ்வது சாதாரணமே ....ஆனால் பல பேருக்கு பல மரணங்கள் சாதரணமாக நடைபெறுவதில்லை அதற்கு காரணம் விதியல்ல  நம்முடைய செயல் தான் என்பது பலபேருக்கு தெரியும் இருந்தும் நாம் அவற்றைப்பற்றி கவலை படவில்லை ....ஏனெனில் இன்றைய அவசர உலகில் கடிகார முள்ளின் பின்னாடியே ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நமக்கு ஒரு நிமிடம் நின்று ,நிதானமாக  சிந்திக்க கூட வாய்ப்பு இருப்பதில்லை ...காலையில் எழுந்தவுடன் அவசரமாக புறப்பட்டு வேலைக்கு சென்று இரவு வெகு நேரம் கழித்து களைத்து வீடு திரும்புகிறோம் ....மறுபடியும் அடுத்த நாளும் அதே ஓட்டம் ....மனைவி ,குழந்தைகள்,பெற்றோர்கள், நிம்மதி ,ஆரோக்கியம் என நமக்கு இன்றியமையாத எல்லாவற்றியும் இழந்து விட்டு இறுதியில் நம்முடைய வாழ்கையையும் எதோ ஒரு கட்டத்தில் தொலைய விட்டுவிடுகிறோம் ......பிறர்க்காக ஏதும் செய்யாமல் நமக்காக ,நம்முடைய சுயநலத்திற்காக போராடிகொண்டிருப்போம்...
நம்முடைய  வாழ்கையில் , நம்முடைய வருங்கால சன்னதிகளுக்காக புண்ணியத்தை சேர்க்காமல் ,நிறைய சொத்து  சேர்த்து வைத்து நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விடுகின்றோம் .... இறுதியில் மரணத்தின் தருவாயில் சிக்கித் தவிக்கும் பொழுது  நாம் நினைப்பது நம்முடைய வாழ்கையில் என்ன சாதித்தோம்  ! யாருக்கு என்ன செய்தோம் !!!    மரணிக்கும் தருவாயில் நல்லதை நினைக்கும் நாம் ஏன் நலமாக இருக்கும் பொழுது நினைப்பதில்லை .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக