வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புறம் பேசுதல் ஒரு பெரு குற்றம்


சித்திர குப்தரும் எமனும் ஒரு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்,  எம தர்ம ராஜாவிடம் தீர்ப்பு கேட்க விஷயத்தை கூறினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தன் ஊரில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் அப்போது ஒரு கருடன் பாம்பை தூக்கி கொண்டு சென்றது அந்த பாம்பு வலி தாங்க முடியாமல் நஞ்சை கக்கியது அந்த நஞ்சோ உணவின் மீது விழுந்துவிட்டது அதை அறியாமல் அந்த உணவை சமையல்காரர் பரிமாற அதை உண்டு மூன்று பேர் இறந்து விட்டனர். சித்ர குப்தருக்கு இபோது இந்த இறப்பு பாவத்தை யார் மீது சுமத்துவது என்ற சந்தேகத்தை எமனிடம் கேட்டார்,ஏனென்றால் ராஜா நல்ல எண்ணத்தில் உணவு கொடுத்தார் அதில் விஷம் உள்ளது அவருக்கு தெரியாது, சமையல் காரரும் விஷம் உள்ளது தெரியாமல் பரிமாறி விட்டார், கருடன் தன் உணவிற்காக பாம்பை தூக்கி சென்றது, பாம்போ வலி தாங்காமல் விஷத்தை கக்கி விட்டது இவர்கள் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்று குப்தர்  கேட்க எமனோ பொறுங்கள் காலம் வரும் போது விடை கூறுகிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அந்த ஊருக்கு புதிதாக  இரண்டு பேர் வந்தனர் அவர்கள் ராஜா அன்னதானம் வழங்குவதை அறிந்து அங்கு போக விரும்பி ஒரு பெண்ணிடம் வழி கேட்டனர் அனால் அவளோ அவர்களிடம் பாத்து போங்கள் எண்ணென்றால் அங்கு உணவு உண்பவர் அனைவரும் செத்து போகிறார்கள் என்று நக்கலாக கூறுகிறாள் இப்போது எமன் சித்ர குப்தரிடம் அந்த இறப்பு பாவத்தை இவள் மீது சுமத்து என்றார். பாவம் அவள் மீது சுமத்த படுகிறது. ஒரு நல்ல செயலை தப்பான எண்ணத்தில் பிறரிடம் புறம் கூறுவது கூட ஒரு பெரும் பாவம் தான். 

5 கருத்துகள்: