செவ்வாய், 10 அக்டோபர், 2017

தண்ணீர்

நான் மழையாக பூமிக்கு
வரும் போது செல்ல வேண்டிய
இடம் தெரியாமல்
இருந்தேன்...
அப்போது நீ
சிறு நீரோடையாக வந்து
வழி காட்டினாய்...
நான் செல்ல வேண்டிய
இடத்தையும் சொன்னாய்....
அதற்காக முயற்சி செய்யாமல்
இருக்கும் போது தான்
தீடீரென்று
எனக்குள் வேகம் வந்தது...
எனக்கான இடத்தை
அடைய சிந்திக்க
துவங்கினேன்...
என்னை
நதியாக மாற்றி
அனைவருக்கும் பயன்படும் படி
உருவெடுக்க
நினைக்கிறேன்...
என்னை
பயன்படுத்தாமல்
இருந்தால்,
ஒரு நாள்
கடலாகவும்
மாறுவேன்.....

# தண்ணீர் #

-----மு. நித்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக