வெள்ளி, 20 அக்டோபர், 2017

      

                                                             உண்டியல்

    மதியம் 2.00மணி ,
        அந்த ஹோட்டலில் நல்ல கூட்டம்  சுற்றி ப் பார்த்த போது ஒரு மூலையில் மட்டும் இடம் காலியாகி இருந்தது.
            யாராவது  போய் அந்த இடத்தில் உட்கார்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரமாக சென்று உட்கார்ந்தேன். 
            இரண்டாவது நிமிடத்தில் சர்வர் வந்தார்  .
           "சார் என்ன சாப்பிடுகிறீர்கள்  ",என்று மெனுக்களை அடுக்கி க் கொண்டே சென்றார் .
            மிகவும் பசியாக இருந்ததால்  ஒரு அன்லிமிடேட் சாப்பாட்டுக்கு ஆர்டர் 
கொடுத்து விட்டு காத்திருந்தேன்....
            ஐந்து நிமிடத்தில் உணவு வந்தது .
            உண்ட திருப்தி யில்  சிறிது நேரம் காத்திருக்க பில்  கொண்டு வந்து  கொடுத்தார் சர்வர் ....
             கல்லாப்  பெட்டி யின் முன் ஜரிகை வேட்டி  சட்டை போட்டு,நெற்றியில் திலகமிட்டு கழுத்தில் சில தங்க நகைகள் அண்ந்துகொண்டு குபேரனாய்த் தோன்றினார் அந்த ஹோட்டலின் முதலாளி .
              500ரூபாய் எடுத்து நீட்டினேன் நான் 
"சில்லறை  இல்லையா ?"என்றார்இல்லை என்றேன்,
உடனே பக்கத்தில் உள்ள ஆதரவ்வற்றோர் உண்டியலில் இருந்து சில்லரையை எண்ணித் தந்தார் அந்த கடையின் முதலாளி....restrarent க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக