வியாழன், 6 ஏப்ரல், 2017

பழமொழி கதை..



கள்ளிப்பட்டி என்னும் ஊரில் ராமு அவர்களுடைய குடும்பத்துடன் வசித்து வந்தான். ராமுவின் அம்மா, அப்பா கட்டிட வேலை செய்பவர்கள். ராமு அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவன் படிப்பில் படுசோம்பேறியாக இருந்தான்.

எல்லா தேர்வுகளிலும் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்றிருந்தான். ஒரு நாள் அவனுடைய பெற்றோர்கள் வேலைச்செய்யும் இடத்திற்கு சென்றிருந்தான். அங்கு அவன் அம்மா, அப்பா கட்டிட வேலை செய்வதைப் பார்த்தான். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு செங்கலை மாடிப்படிக்கட்டிற்கு தூக்கிச் செல்வதைப் பார்த்தான்.

அப்பொழுது அவன் கல்வியின் சிறப்பு மற்றும் அவன் பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்தான். அடுத்து வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என எண்ணினான். அன்று முதல் நாள்தோறும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து படிக்க ஆரம்பித்தான். இடைப்பருவத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுக்க ஆரம்பித்தான். ஆசிரியர் அவனைப் பாரட்டினார்கள்.

அதைப்போலவே முழுஆண்டு பொதுத்தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்று அவன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்தான். அப்போது தான் அவனுக்கு புரிந்தது முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று. இதன்மூலம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என அறிந்துக் கொண்டான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக