வியாழன், 6 ஏப்ரல், 2017

பணம்!!!







எதுக்குண்ணே ஓட்டுக்கு போய்
ஐஞ்சாயிரம் தர்றீங்க?வாங்கிட்டு போடலன்னா?"

"அட...விடுறா...
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா-குடல் வெந்து ஆஸ்பித்திரில சேர்வான்.
ஆஸ்பித்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...

கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...நடுவுல ஒரு
ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக