சனி, 4 மார்ச், 2017

கௌதம புத்தா

                                                             

புத்தர் உலகப் புகழ்பெற்ற ஒரு மத போதகர்.அவரின் மதம் ``பௌத்தம்’’. அனைத்து ஆசைகளையும் துறந்து பௌத்தம் என்ற சமயத்தை கண்டார்.இந்த பௌத்த சமயத்தை உலகளவில் பலர் பின்பற்றுகின்றனர்.
            புத்தர் அரச குல பரம்பரையில் பிறந்தவர்.ஜோதிடர் ஒருவர் மன்னரிடம்``தங்கள் மகன் அரசாட்சி புரியாமல் அனைத்தையும் துறந்து போவார்’’ என்று கூறியதால்,மன்னர் புத்தரை வெளிஉலகிற்கே காட்டாமல் வளர்த்தார்.ஆகையால் அவர் இளம் வயதை அரண்மனையில் மிக செழிப்பாக கழித்தார்.தனது 16ஆம் வயதில் அழகான யசோதையை மனந்தார்.வளர வளர வெளியுலகை காணும் ஆவல் இவருக்குள் ஏற்பட்டது.ஆகையால் ஒரு இரவில் அரண்மனையை விட்டு வெளியேரினார்.அப்போது நிகழ்ந்த 3 நிகழ்வுகள் இவர் வாழ்வை புரட்டி போட்டது.முதலில் முதுமையால் தவிக்கும் ஒரு மனிதரை கண்டார்.இரண்டாவதாக முதுமை அடைந்த ஒரு மனிதர் நோயால் பாதிக்கப்பட்டு தவித்ததைக் கண்டார்.இறுதியாக இறந்து போன பிணம் ஒன்றைக் கண்டார்.இந்த அனைத்து நிகழ்ச்சியும் இவரை அதிர்ச்சியில் ஆழ்த்தின.பின்பு வாழ்வின் `உண்மையைதேடத் தொடங்கினார். அதற்காக பல நாட்கள் தன்னை உணவு உட்கொள்ளாமல் வருத்திக்கொண்டார்.பின்பு இது சரியான வழியில்லை என்று தீர்மானித்து இறுதியாக ``போத்கையா’’ என்ற இடத்தில்``போதி’’மரத்தடியில் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.பின்னர் ஒரு அசரிதி அவர் காதில் விழுந்தது.அது ``ஆசையே அழிவிற்கு காரணம்’’என்றது.அன்றுமுதல் ஒரு பிச்சைபாத்திரத்தை மட்டுமே தனக்கு சொந்தமாக கொண்டு,மக்களுக்கு ``சரியான பார்வை’’
``சரியான சிந்தணை’’
``சரியான பேச்சு’’
``சரியான செயல்கள்’’
``சரியான வாழ்க்கை’’
``சரியான முயற்சி ’’
``சரியான மனப்பான்மை’’ மற்றும்
``சரியான தியானம்’’ என மக்களை நல்வழியில் செலுத்திய அவர்483BC அன்று தனது80ஆவது வயதில் இயற்கை எய்தினார்.


1 கருத்து: