செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தத்துவத் துளிகள்


   தத்துவ  துளிகள் 
சை, கோபம், களவு, கொண்டவன்
        பேசத் தெரிந்த மிருகம்.
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
        மனித வடிவில் தெய்வம்.   
                                       
1.  நம்பிக்கை இழக்காதே, அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும்.
2.  செயற்கரிய செயலை துவக்கி வைப்பது நல்லறிவு அதை நிறைவேற்றி வைப்பது இடையறாத உழைப்பு.
3.  சினத்தை விட்டவன் எந்நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைகிறான்.
4.  தேவைகள் குறையும் அளவுக்கே, தெய்வத் தன்மை அடைவோம்.
5.  பொறாமையில்லாதவனிடம் தத்துவ ஞானம் இருப்பதில்லை.
6.  ஒரு மனிதன் எப்படி இறந்தான் என்பது முக்கியமன்று, அவன் எப்படி வாழ்ந்து வந்தான்  என்பதுதான் முக்கியம்.
7.  துன்பம் இல்லாமல் வெற்றியில்லை, முயற்சியில்லாமல் பெருமையில்லை.
8.  செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு, எல்லா செல்வதையும் இயக்குவதும் அதுவே.
9.  பாவத்திற்கு பல கருவிகள் உண்டு,ஆனால் அவற்றிற் கெல்லாம் பொருத்தமான கைப்பிடு பொய்…
10.         அறிவு தெளிவுபெற வைக்கிறது, தெளிவு துணிவைத் தருகிறது, வேறென்ன வேண்டும்.
11.         மனிதனின் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

2 கருத்துகள்: