வெள்ளி, 18 நவம்பர், 2016

மரியா தி ஃபூலிஷ் கேல்

                                                  மரியா தி ஃபூலிஷ் கேல்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்
           

மரியா ஒரு சிறுமி அவள் எப்பொழுதும் எல்லாவற்றையும் மறந்துகொண்டே இருப்பாள்.அவள் அலட்சியமானவலும் கூட.நிறைய பொம்மைகள், பெண்சிலைகள், புத்தகங்கள் மற்றும் வண்ணங்களை தொலைத்திருக்கிறாள். அவளது தாயார் எப்பொழுதும் ``மரியா,நீ அடக்கமும் அமைதியும் கொண்ட சிறுமி ஆனால்,நீ கவனமாக இருக்க கற்றுக்கொள்.உன்னுடைய உடமைகளின் மதிப்பை நீ அறிய வேண்டும்’’ என்றார்.ஒரு நாள் மரியாவின் தந்தை அவளுக்கு அழகான ஒரு பொம்மை வாங்கி வந்தார்.மரியாவுக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்திருந்தது.நாள்முழுக்க அதனுடன் விளையாடிவிட்டு அதனுடன் தூங்கவும் செய்வாள்.அவள் தனது தந்தைக்கு அதனை தொலைக்கமாட்டேன் என்றும் உடைக்கமாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தாள்.

            விளையாடிவிட்டு அதனை மரப்பேழைக்குள் வைத்துவிடுவாள். ஒருநாள் மரியாவை வெளியே அழைத்துச்செல்ல அவள் தந்தை முடிவு செய்திருந்தார்.மரியா அதனை அறிந்தவுடன் வீட்டிற்குள் ஓடி அந்த பொம்மையை தன் பைக்குபின் இனைத்து முதுகில் மாட்டிக்கொண்டாள்.அவள் தந்தை இதனைப்பற்றி விசாரிக்கையில்``என் பொம்மையை தனியே இங்கு விட்டாள் அது தொலைந்துவிடும்.அதனை என்னுடன் எடுத்துச் சென்றா, நான் போகிற இடத்திற்கு அதுவும் வரும்.நான் அதனை தொலைக்க மாட்டேன்’’. என்றாள்.அவளது அறியாமையைக்கண்டு புன்முறுவல் செய்தார் அவள் தந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக