திங்கள், 24 அக்டோபர், 2016

பதப்படுத்தட்ட இறைச்சி உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது...!!!



Photo: புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம்போய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம்.

பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.

புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம்போய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம்.

பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.

Image result for pizza parker in india


6 கருத்துகள்:

  1. பலருக்கும் பயனுள்ள தகவல்கள் இருப்பினும் யாரும் உணரப்போவதில்லை வேகமாகப் போகும் மனிதன் எங்குதான் போகப்போகின்றான் நான் வழக்கம் போல் சொல்வது விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ,எதுக்கு உழைக்கிறோம் எதுக்கு வாழ்கிறோம் என்றே பலருக்கும் தெரியவதில்லை ஐயா.தங்களின் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  2. நல்லதொரு ஆரோக்கிய பதிவு.
    //புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான் அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம் ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.//
    சரியான தகவல். அத்துடன் சிவப்பு நிறத்து இறைச்சிகளை உண்பதும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது.
    //பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.//
    இது சரியான தகவல் அல்ல.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா.பன்றி இறைச்சியால் நமக்கு 70 வகையான நோய்கள் வரும் என்பது அறிவியல் ரீதியான உண்மை ஐயா.மேலும் தகவலுக்கு http://sunnahinislam.blogspot.in/2014/07/blog-post_7.html இந்த வலைப்பக்கம் சென்று பார்க்கவும் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.

    அறிந்த தகவலுடன் கூடுதலான செய்திகளும்

    பயனுள்ள பதிவு.

    தொடர்கிறேன்..

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகையின் ஊக்குவிப்பிற்கு நன்றி ஐயா.

      நீக்கு