வியாழன், 8 செப்டம்பர், 2016

சாதி ஏனோ..???

வணிகவியல் துறையின் உதவிப் பேரராசிரியர் வா.சுரேசு அவர்கள் சாதி ஏனோ என்ற தலைப்பில் எழுதிய கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்... 

Image result for சாதி ஏனோ

ஓரறிவாம் (உணர்வற்ற) தாவரங்களில்
சாதியில்லை...!!!
ஈரறிவாம்(உயிருள்ள) ஈ, கொசுவில்
சாதியில்லை..!!!
மூவறிவாம் நண்டு வண்டில் 
சாதியில்லை..!!!
நான்கறிவாம் எழில்மிகு குயில் மயிலில்
சாதியில்லை..!!!
ஐந்தறிவாம் நாய் சிங்கம்தனில்
சாதியில்லை..!!!
ஆறறிவாம் அறிவுள்ள மனிதனிலே
சாதி ஏனோ...???

4 கருத்துகள்: