வியாழன், 5 மே, 2016

பெரியார் மாவட்டம் தான் ஈரோடு...!!!




ஈரோடு மாவட்டத்தில் 17.09.1879 அன்று வெங்கட நாயக்கர்-சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் தந்தை பெரியார்.

சமுதாயத்தில் சாதி,சமயம்,வேறுபாடு அகலவும் மூடநம்பிக்கை முற்றிலுமாக ஒழியவும்,மனிதநேயம் தழைக்கவும் பாடுபட்ட மாமேதையாவார்.

ஈரோடு  நகர மன்றத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற சாதனை புரிந்தார்.

தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையினை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1925-ல் சுயமரியாதை இயக்கம் கண்டார்.குடியரசு ஏட்டை துவக்கினார்.

1927-ல் வருணாசிரமம் ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று காந்தியாரிடம் வாதாடினார்.

1937-ஆம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1938-ல் சென்னையால் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1944-ல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி ,திராவிடர் கழகமாக பெயர்  மாற்றம் பெற வகை செய்தார்.

1950-ல் பெரியார் பொன்மொழிகள் நூலுக்காக ஆறுமாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று பத்து நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

1951-ல் வகுப்புரிமைக்காகக் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியல் சட்டத்தை முதன் முறையாகத் திருத்தச் செய்தார்.

1967-ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள்,’யான் பெற்ற அரசு என் தந்தைக்குரிய பரிசு’ என்று குறிப்பிட்டு தமது ஆட்சியையே தந்தை பெரியாரின் பெரும் சமுதாயப் பணிக்கு காணிக்கையாக்கினார்.

1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி  பாராட்டியது.

தந்தை பெரியார் தமிழகத்தின் வரலாற்றில் ஓரு சகாப்தமாக காலகட்டமாக திருப்பு முனையாக திகழ்ந்தவராவார்.

டிசம்பர் 19 அன்று சென்னை தியாகராய நகரில் சொற்பொழிவு ஆற்றினார்.அதுவே அவரது இறுதிச் சொற்பொழிவு.அதுவே அவரது மரண சாசனம்.

டிசம்பர் 24 காலை 7.22 மணிக்கு தந்தை பெரியார் தம் 95-ம் அகவையில் மறைந்தார்.அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 25 அரசு மரியாதையுடன் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.57 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.


1974-ல் தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு ’எம்.வி.தமிழ்ப் பெரியார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

1975-ல் ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவகமாக ஆக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சமூக சீர்த்திருத்தவாதி பிறந்து வாழ்ந்த இம்மண்ணில் நானும் பிறத்தேன் வளர்கிறேன் என்பதில் பெருமிதமாக உள்ளது.

என்னுடைய ஊரு ஈரோடுங்க…!!!!

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
  3. இப்படிப்பட்ட கட்டுரைகளை தரும் உங்களையும், உங்கள் தோழிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள். கல்லூரி மாணவிகள் இப்படி வலைப்பக்கம் எழுதுவது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. தங்களுக்கு விருது கிடைத்ததற்கும் பாராட்டுகள் வைசாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.தங்களை போன்றவரின் ஆதரவு இருகையில் எனது சகோதரிகள் இதுப் போன்று சுவையான பதிவுகளை இந்த வலை உலகில் சுவைக்க தந்துக் கொண்டே இருப்பார்கள் ஐயா.நன்றி ஐயா.

      நீக்கு