திங்கள், 7 மார்ச், 2016

அன்புள்ள அம்மா

அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!
     தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!
முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்
     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்
இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி
     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!
பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!
நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!
அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;
     இந்த அன்னையின் அன்பை பெற என்று!
ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;
     அதிலும் மகிழ்ச்சித் தான் அவளுக்கு!
சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்
     இவளோ தன் குழந்தைக்காக தன்
வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!
     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!
ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு
     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!
நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!
     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த
தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்
     குழந்தையாய் தவழும் போது!


1 கருத்து:

  1. அம்மாவின் அன்பு அளக்க முடியாத பொக்கிஷ மணல் மேடு
    அருமை வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு