புதன், 17 பிப்ரவரி, 2016

சுவாசத்தின் மறுபக்கம்..!!!



15.12.2015-ல் தொடங்கப்பட்டது எங்கள் கல்லூரி வலைப்பூ.இதன் நோக்கம் கணினி வழியில் தமிழை உலகளவில் பரப்புவதே.நாங்கள் இதற்காக 50 மாணவிகளுக்கு இலவசமாக தமிழ் தட்டச்சு,வலைப்பதிவில் எவ்வாறு தனது சொந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது மேலும் விக்கிப்பீடியாவிலும் எப்படி எழுதுவது குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழில் கட்டுரைகள்,கவிதைகள்,அவரவர் துறையைச் சார்ந்த சிலவற்றை எளிமையாக பகிர்ந்து வருகின்றனர்.மேலும் கல்லூரியின் நடப்புகள் குறித்தும் எழுதபட்டு வருகின்றனர்.

எத்தனையோ  பதிவுகள் அவற்றிக்கு முகந்தெரியாத நல்ல உள்ளம் படைத்தவர்களின் வருகைகள் மற்றும் கருத்துகள் மற்றும் ஊக்கமும் சேர்ந்தே எங்கள் மாணவிகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களிடையே உள்ள தாய்மொழி குறித்த பற்று இவையெல்லாம் சேர்ந்தே இன்று நாங்கள் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவை.

ஆம் மூன்று மாதங்கள் சிறிய தூரம் தான் ஆனால் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவு என்பது பேரின்பமான தருணம்.மாணவிகள் அனைவருமே சிறந்த முறையிலும் மற்றும் பிறருக்கு பயன்பெறும் வகையிலும்  பதிவை எழுத வேண்டும் என்ற வகையில் தேடி தேடி அழகான முறையில் தமிழில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று.


இந்த முறையிலும் தமிழை வளர்க இயலும் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தி இது குறித்து விழிப்புணர்வு அளித்து எங்கள்
 முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுத்தது  என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா தான்.இந்த கணம் நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

முனைவர்.இரா.குணசீலன் ஐயா.

குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; என் குருநாதரே நன்றிகள் பல ஆயிரம்.எங்கள் ஒவ்வொரு முன்னேறவும் தங்களுடையதே குருவே.மாணவிகள் அனைவருக்கும் நன்றிகள் தொடரட்டும் நம் பதிவுகள்..!!








9 கருத்துகள்:

  1. 100 _ஆவது பதிவினுக்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் மத்தியில் தமிழ் வளர்க்கும் பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.தகவலுக்கு

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும். உங்கள் பேரவையின் லோகோவில் 'கணித்தமிழ்' என்று இருக்கிறது. 'கணினித் தமிழ்' என்பதே சரியானது என்பது எனது கருத்து. காண்க: கணினித் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை.

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கவும். கணித்தமிழ் என்பதும் சரிதான். எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஆசிரியரால் நல்ல மாணவா்களை உருவாக்கமுடியும்
    நல்ல மாணவா்களால் நல்ல ஆசிரியர்களாக உயரமுடியும் என்ற பொன்மொழியை வாசிக்கும்போது நானும் பெருமிதம் கொள்வேன். நான் நல்ல மாணவா்களை உருவாக்கியிருக்கிறேன் என்று. இணையத்தமிழ் வளா்ச்சியில் என் எண்ணங்களின் செயல்வடிவங்களாக இருக்கும் மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. என் குருநாதரே தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.தங்களின் இணையத்தமிழ் வளர்ச்சியில் எண்ணங்களின் செயல்வடிவங்களாக இருக்கும் மாணவிகளில் நானும் ஒருவர் என்பதில் பெருமிதமாக உள்ளது.கட்டாயம் நமது இணையத்தமிழ் வளர்ச்சி மேலோங்கும்.தங்களின் உறுதுணையும் வழிக்காட்டுதலும் நம் மாணவிகள் முன்னேற உதவும் குருவே.தங்கள் பணித் தொடர வாழ்த்துகள் என் குருநாதரே..!!!

    பதிலளிநீக்கு
  6. பேராசிரியருக்கு என் வாழ்த்துகள்...வைசாலிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல ஐயா.

      நீக்கு