சனி, 20 பிப்ரவரி, 2016

விவேகானந்தர்-ஒரு சுவாரசியம்



                   விவேகானந்தர்-ஒரு சுவாரசியம்

 
 
 
          ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒரு முறை விவேகானந்தரை அழைத்து, இது வரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கின்றேன் என்றார்.
   விவேகானந்தர், அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணைபுரியுமா? என்று கேட்டார். பரமஹசரோ புன்னகைத்து.’அவற்றை கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணைபுரியும்என்றார்.

    உடனே விவேகானந்தர், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரேனேக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும்,இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயன்படுத்திவிடுவேனோ என்னவோ",என்று மறுத்து விட்டார்.

 

3 கருத்துகள்:

  1. தேடல் மட்டுமே வாழ்வின் எல்லா புதிகளுக்கும் விடையாக அமையும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு தோழி.தங்களின் தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன் தொடர்ந்து புது தேடலோடு எழுதுங்கள் .

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மிக அற்புதமான பதிவு..இப்படி ஒரு ஆழமான கட்டுரை உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.. மிகவும் மகிழ்ந்தேன் ..என் துறை என்பதால் உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு