வியாழன், 11 பிப்ரவரி, 2016

வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!




சார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
இவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.
இவரது தாத்தாவும்  தந்தையும் மருத்துவர்களாக  இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.
இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை  பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.
இது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ராபர்ட்  என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS  BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.
ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின்  போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.
பல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர்  THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.
அடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
இந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.
இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.
மனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக