செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பகைமையை ஒழிப்போம்..!!!


சுட்டு எரிக்கும் சூரியனும் பகை பார்ப்பதில்லையடா..!!
கொட்டுகின்ற மழையும் மதம் பார்ப்பதில்லையடா..!!
வீசிகின்ற காற்றும் இனம் பார்ப்பதில்லையடா..!!
ஓடுகின்ற நதியும் ஜாதி பார்ப்பதில்லையடா..!!


வேறுபட்ட மனிதர்கள் மத்தியில்
வேறுபட்ட மலர்களும் சமமாகத்தான்
மலரின் வாசனையை வீசுகிறது-ஆனால்
நாம் மலருக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறோம்..!!




நதிகள் பல ,கடல் ஒன்று..!!
நகரங்கள் பல,மாநிலம் ஒன்று..!!
மாநிலங்கள் பல.நாடு ஒன்று..!!
நாடுகள் பல,உலகம் ஒன்று..!!

புரிந்து கொள்ளுடா மானிடா
பகைமையை விரட்டுடா..!!





படித்ததில் பிடித்தது,
ரா.தேவயானி,
முதலாமாண்டு வணிகவியல்.

3 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வோடு தமிழ் எழுத்துகளில் வருகை தந்திருக்கும் என் தோழியே வாழ்த்துகள் தொடரட்டும் உம் தமிழ் எழுத்துக்கள் தேவயானி..

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. உணர்ச்சி பூர்வமான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு