செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கருமியின் செல்வம்



               
பழமொழி

                     முன்றுறையரையனார்

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கும் முரசுடைச் செல்வம்தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.


நாய்பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி. தெங்கம்பழம் – முற்றிய தேங்காய். நாய்க்கு கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும்  தின்ன முடியாது; பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்களுக்கு வழங்கித் தருமம் செய்யாமலும், தானும்  அநுபவிக்காமல் காக்கும் கருமியின் செல்வமானது அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும்.


1 கருத்து: