வியாழன், 7 ஜனவரி, 2016

தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்..!!!


தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்..!!!


மார்கழி மாத குளிரும்,

பங்குனி மாத வெய்யிலும்,

பழகிபோச்சு..!!

பருவத்தில் இருக்கும்

வித்தியாசம்

மறந்துபோச்சு..!!

கொட்டும் மழையையும்,

அடிக்கும் வெய்யிலையும்

தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துருச்சு-

குடிசை  போட காசு இல்லை என்பதனால்..!!

கால் தேய உழைச்சாலும்-இருக்க

ஒரு இடம் கிடைக்கவில்லை..!!

சிலரோ பரிதாபப் படுகிறார்கள்..!!

பலரோ ஏளனப்படுத்துகிறார்கள்..!!

என்னடா வாழ்க்கை என்றாலும்;

இருக்க கூடவா இடம் கிடைக்காது இந்த உலகில்

என்னும் நம்பிக்கையில் வந்த

சிறு  நிம்மதியோடு ஓடுகிறது

எங்கள் வாழ்க்கை..!!

பகலே அதிகம் என நினைத்தானோ என்னவோ

இரவை  படைத்தான்  அந்த  இறைவன்..!!

நித்திரையில் நிம்மதியை

தொலைத்தோம் நாங்கள்..!!

தெருவோரம் கிடைக்கும் எங்களை-இறைவனே

ஏரெடுத்து பார்க்கவில்லை..!!

அந்த வழியே வரும்-வாகனம்


ஓட்டுபவன் 

கண்களுக்கு

நாங்கள் 

குப்பைகளாகவே 

தெரிவோம் போல..!!

அவன் சில நேரங்களில் எருமை

வாகனம் ஓட்டி வருபவனாய் இருப்பதனால்

எமலோகமே கொண்டுபோய்   சேர்த்துவிடுகிறான்..!!

உயிரை வருபவன் கையில் கொடுத்து

கண் மூடுகிறோம்-அவன்

மனம் வைத்தால் கண்திறப்போம்..!!

இல்லையென்றால்,

அவனே பத்திரமாக கொண்டுபோய்

சேர்த்துவிடுவான்,

கைலாசத்துக்கோ..!!வைகுந்தத்துக்கோ..!!

- கீர்த்தனா

இரண்டாமாண்டு கணிதவியல்

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் கீா்த்தனா. சிறந்த கவிதைகள் சிறப்பான மாற்றத்தை ௨ருவாக்கும். ௨ங்கள் எழுத்துகள் தொடர்ந்து நல்ல மாற்றத்தை ௨ருவாக்க வேண்டும். நன்றி.....
    இங்ஙனம்:
    கு. கந்தசாமி, வேதியியல் துறை ௨தவிபேராசிரியர்,
    கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூாி.

    பதிலளிநீக்கு